முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த அசாதுதீனின் மஜ்லீஸ் கட்சி !

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த அசாதுதீன் ஓவைசி கட்சி ஒரு வார்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றியை பதிவு செய்து வரும் நிலையில், தமிழகத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது அசாதுதீன் ஓவைசியின் மஜ்லீஸ் கட்சி. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாணியம்பாடி நகராட்சிக்குப்பட்ட 19-வது வார்டில் அசாதுதீன் ஓவைசி கட்சி சார்பில் பட்டம் சின்னத்தில் போட்டியிட்ட நபிலா வக்கீல் அகமது வெற்றி பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து