முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவுக்கு மொபைல் போன் ஏற்றுமதி நிறுத்தம்: சாம்சங் நிறுவனம் அறிவிப்பு

சனிக்கிழமை, 5 மார்ச் 2022      உலகம்
Image Unavailable

ரஷ்யாவுக்கு மொபைல்போன் மற்றும் உதிரிபாகங்களின் ஏற்றுமதியை நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.  அந்த வகையில் தென்கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்ட சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ரஷ்யாவில் தனது செல்போன் மற்றும் உதிரி பாகங்களின் ஏற்றுமதியை நிறுத்துவதாக நேற்று அறிவித்துள்ளது. ஏற்கனவே ரஷ்யாவில் தங்களது விற்பனை மற்றும் சேவையை நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனமும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து