முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெயில் நிலையம் முன் அமர்ந்து பியானோ வாசித்த உக்ரேனிய பெண் : கண்ணீர் மல்க நின்று ரசித்த மக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2022      உலகம்
Image Unavailable

Source: provided

கீவ் : உக்ரேனிய பெண் ஒருவர் ரெயில் நிலையம் முன் அமர்ந்து பியானோ வாசித்து அனைவரது கண்களிலும் கண்ணீரை வர செய்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

ரஷ்யாவின் கொடூர தாக்குதலால் உருக்குலைந்து போயிருக்கும் உக்ரைனில் பொதுமக்கள் பாதுகாப்பு தேடி அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். ஒருபுறம் உக்ரைனிலிருந்து மக்கள் வெளியேறி வரும் நிலையில், உக்ரேனிய பெண் ஒருவர் ரெயில் நிலையம் முன் அமர்ந்து பியானோ வாசித்து அனைவரது கண்களிலும் கண்ணீரை வர செய்தார். உக்ரைனின் முக்கிய நகரமான லீவ் ரெயில் நிலயத்தின் வெளியே இந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

அவர் லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங்கின் வாட்-எ-வொண்டர்புல்-வோர்ல்டு பாடலை தனது பியானோ கருவியில் வாசித்தார். கைகளில் தங்கள் பைகளுடன் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு சென்று கொண்டிருந்த உக்ரைன் மக்கள், அவருடைய இசையை சிறிது நேரம் கண்ணீர் மல்க நின்று ரசித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.  இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து