முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோபைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2022      உலகம்
Image Unavailable

Source: provided

கீவ் : உக்ரைனுக்கான பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் தொடர்வது குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் பேசியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைனில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட போர் நேற்று 11-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.  இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் உரையாடினார். இதுகுறித்து ஜெலன்ஸ்கி தனது  டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அமெரிக்காவின் ஆயுத உதவி, அவரிடம் பாதுகாப்பு, உக்ரைனுக்கான நிதியுதவி, ரஷ்யாவுக்கு எதிராக தொடர் தடைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன் என பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து