முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவாவில் பெரும்பான்மையுடன் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கும்: முதல்வர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை

புதன்கிழமை, 9 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

கோவாவில் பா.ஜ.க மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கோவாவின் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. இதற்கிடையில், 2022 சட்டமன்றத் தேர்தல்லிற்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று முன்தினம் மாலை வெளியானது. அதில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் தலா 16 இடங்களை வெல்லும் . இழுபறி நிலைமை உருவாகலாம் என்று கருத்து கணிப்புகள் வெளிவந்தன.

இந்த நிலையில், கருத்து கணிப்புகள் குறித்து முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.,“சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. கோவாவில் பா.ஜ.க மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். காங்கிரசுக்கு ஏன் இவ்வளவு கவலை என்று தெரியவில்லை. அவர்கள் தங்கள் வேட்பாளர்களை நம்பவில்லையா? அல்லது யார் வெற்றி பெறுகிறார்கள் என்று தெரியாமல், வேட்பாளர்களை தனிமையிலும் அழுத்தத்திலும் வைத்திருக்கிறார்கள்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து