முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் தினத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெய்

திங்கட்கிழமை, 14 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

நடிகராக வலம் வரும் ஜெய் வீரபாண்டியபுரம் படம் மூலம் இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார். வீரபாண்டியபுரம் படத்தின்  பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்து, இனி அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என வாக்குறுதியும் கொடுத்தார். அந்த வாக்குறுதியை நிறேவேற்றும் விதமாக உலக பெண்கள் தினத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். நடிகர் சுப்பு பஞ்சு மூலமாக  தமிழ் சினிமாவில் உள்ள பெண் செய்தியாளர்களுக்கு பெண்கள் தினத்தை முன்னிட்டு அழகிய பட்டுப்புடவைகளை வழங்கியுள்ளார். அந்த பட்டுப்புடவைகளை தனது தந்தை சம்பத், சகோதரி சந்தியா இருவரையும் நேரடியாக அனுப்பி ஒவ்வொரு பெண் செய்தியாளர்களிடமும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய ஜெய், நேரம் காலம் பார்க்காமல் குடும்பத்தையும் பத்திரிக்கை வேலையையும் அவர்கள் சமாளிக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது செய்ய ஆசைப்பட்டேன்.அதனால் அவர்களுக்கு என் அன்பை, நன்றியை சொல்லும் வகையில் பட்டுப் புடவைகளை வழங்கினேன்.” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து