முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஜம்மு-காஷ்மீரில் 5 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்

புதன்கிழமை, 30 மார்ச் 2022      இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக அரசு ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்வதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்களும் அதுதொடர்பான பிரச்னைகளும் அதிகரித்துள்ள நிலையில், காவல்துறையின் கண்காணிப்பும் தீவிரப்படுத்துப்பட்டு வருகிறது. இந்நிலையில், முக்கிய பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக அரசு ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்ய மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தீவிரவாதிகளுடன் தொடர்பிலிருந்த 5 பேரில் இருவர் காவல்துறையினர், ஒரு ஆசிரியர், ஒரு சுகாதாரத் துறை ஊழியர்  மற்றும் மேலும் ஒருவர் கணினி நிர்வாகி என தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து