முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹஃபீஸ் சையதின் மகனும் தீவிரவாதியாக அறிவிப்பு : இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையால் மத்திய அரசு நடவடிக்கை

சனிக்கிழமை, 9 ஏப்ரல் 2022      இந்தியா
Hafiz Syed 2022 04 09

Source: provided

இஸ்லாமாபாத் : மும்பை தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹஃபீஸ் சையதின் மகனும் தீவிரவாதியாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கையை அடுத்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கு ஒன்றில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனரான ஹபீஸ் சயீத்திற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. ஹபீஸ் சயீத்தின் சொத்துக்களை முடக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹபீஸ் சயீத் கட்டிய மசூதி மற்றும் மதரஸா ஆகியவற்றை அரசு கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பாகிஸ்தான் மதிப்பில் ரூ.3.40 லட்சம் பணம் அபராதமும் விதித்து லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்ற நீதிபதி நீதிபதி இஜாஸ் அகமது புட்டார் தீர்ப்பளித்தார். 

2008ம் ஆண்டு நவம்பரில் நடந்த மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் தற்போது பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். 70 வயதான ஹபீஸ் சயீத் ஏற்கனவே வேறொரு வழக்கில் 36 ஆண்டு கால சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

மும்பையில் பல்வேறு இடங்களில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் தலைவரான ஹஃபீஸ் சையது இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஹஃபீஸ் சையதுக்கு எதிரான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் வழங்கிய மத்திய அரசு, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதற்கு பாகிஸ்தான் சம்மதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, ஹஃபீஸ் சையதை தீவிரவாதி என சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா அறிவித்தது. மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐ.நா.விலும் இந்தியா தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஹஃபீஸ் சையதின் மகன் ஹஃபீஸ் தால்ஹா சையதும் ஈடுபட்டு வருவதாக உளவு அமைப்புகள் ஆதாரங்களுடன் தெரிவித்து வந்தன. குறிப்பாக, இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு ஆள் சேர்ப்பது, தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து, ஹஃபீஸ் தால்ஹா சையதையும் 'தீவிரவாதி' என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து