முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீர் என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா தளபதி உள்பட 2 பேர் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 9 ஏப்ரல் 2022      இந்தியா
Kashmir 2022 04 01

Source: provided

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் என்கவுன்டரில் லஷ்கர் -இ - தொய்பா தளபதி உள்பட 2 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சிர்ஹாமா பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், " அனந்த்நாக் சிர்ஹாமா பகுதியில் நேற்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதி நிசார்  தார் கொல்லப்பட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனந்த்நாக்கின் சில பகுதிகளில் இணையம் முடக்கப்பட்டுள்ளது. மேலும், அனந்த்நாத் சிர்ஹாமா பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

குல்காம் பகுதியில் நடந்த மற்றொரு சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். தப்பி ஓடிய பயங்கரவாதிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து