முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 10 ஏப்ரல் 2022      இந்தியா
Kashmir 2022 04 01

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பிசேம்பூர் நகர் பகுதியில் நேற்று  காலை பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் 3 பேர் காயம் அடைந்தனர். வேறு யாரேனும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து