முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை ஜனாதிபதி வெங்கையா தலைமையில் டெல்லியில் சுதந்திர தின அமுத பெருவிழா : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2022      இந்தியா
Venkaiah-Naidu 2022 04 12

Source: provided

புதுடெல்லி : மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகத்தால் டெல்லியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமையில்  நடத்தப்பட்ட  சுதந்திர தின அமுதப் பெருவிழா  நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அதனை சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இப்பெருவிழாவின் ஒரு பகுதியாக ஒன்றிய ஊராட்சித் துறை அமைச்சகம் டெல்லியில் இந்நிகழ்வினை அடையாள வாரமாக கடந்த 11-ம் தேதி முதல் வரும்17-ம் தேதி வரை கொண்டாடி வருகிறது.  இந்நிகழ்ச்சியை துணை ஜனாதிபதி  வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியின் முதல்நாள் நிகழ்வாக 11-ம் தேதியன்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்குடன் இந்தியாவின் அனைத்து மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கள், அனைத்து மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலர்கள் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  தமிழகத்தின் சார்பில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் பி.அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்,  நீடித்த வளர்ச்சி இலக்குகளை  ஊராட்சிகள் அளவில் அமல்படுத்திட, ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சியை எட்டிட எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார். தமிழகத்தினைப் பொருத்த வரையில் சுமார் 80 ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள்  மற்றும்  அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து