எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 15வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற 37-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை மோதின. முதல் வெற்றியை தேடி சொந்த மைதானத்தில் களம் கண்ட மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வி அடைந்தது. நடப்பு தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாத மும்பை அணி நேற்று 8-வது தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் மும்பை அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட் 19 ரன்களில் மும்பை அணியின் முன்னாள் வீரர் குருனால் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது பொல்லார்ட் பெவிலியன் நோக்கி நடையைக்கட்ட, அவர் அருகில் சென்ற குருனால் பாண்டியா துள்ளிக்குதித்து பொல்லார்ட் தலையில் முத்தம் கொடுத்தார். ஆட்டமிழந்த விரக்தியில் சென்ற பொல்லார்ட், குருனால் பாண்டியா-விடம் பதிலுக்கு எதுவும் தெரிவிக்காமல் நடையை கட்டினார். இந்த நிலையில் தற்போது மும்பை அணியின் ரசிகர்கள் குருனால் பாண்டியாவிற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
_________________
ரிஷப் பண்ட்-க்கு குல்தீப் புகழாரம்
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த சீசனில் விக்கெட் வேட்டை நிகழ்த்தி வருகிறார். இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், டோனியை போன்று சரியான திசையில் வழிநடத்துவதாக குல்தீப் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில், ''சுழற்பந்து வீச்சாளர்களின் வெற்றியில் விக்கெட் கீப்பர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்தவகையில் இம்முறை எனது எழுச்சிக்கு டெல்லி அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட்தான் காரணம். உரிய நேரத்தில் நல்ல ஆலோசனை வழங்குவார். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. ஸ்டம்புக்கு பின்னால் நின்று தேவையான ஆலோசனை வழங்குகிறார். களத்தில் மிகவும் 'கூலாக' செயல்படுகிறார். எம்எஸ் டோனியை போன்று சரியான திசையில் அவர் வழிநடத்துகிறார்.
______________
எம்.எஸ்.டோனிக்கு சி.எஸ்.கே பயிற்சியாளர் ஹஸ்ஸி புகழாரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் பகிர்ந்த வீடியோவில், முன்னாள் ஆஸ்திரேலிய மிடில்-ஆர்டர் பேட்டரும், சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளருமான மைக்கேல் ஹஸ்ஸி, முன்னாள் சிஎஸ்கே கேப்டன் டோனியின் வியூகம் எப்படி என்றும் பதட்டமான சேசிங்குகளில் அவரது மனதில் என்ன கணக்குகள் செல்கின்றன என்பதையும் விளக்கினார்.
“டோனி சுவாரசியமானவர், ஏனென்றால் அவர் ஆட்டத்தின் மத்தியில் அதனை போக்கை மிகவும் கணக்கிடக்கூடியவர். அதாவது, நாங்கள் அவருடன் நடுவில் உரையாடுகிறோம். மேலும் நிகர ரன் ரேட் அதிகரித்து வருவதால் நான் கொஞ்சம் பயப்படத் தொடங்குவேன். நான் அடிக்க வேண்டும் என்றாலும், அவர், ‘கவலைப்படாதே, அவர்கள் இன்னும் பந்து வீசப் போகிறார்கள், எங்கு பந்து வீசுவது என்று அவருக்குத் தெரியாது, நாம் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும்’ என்று அவர் இறுதி வரை செய்ய வேண்டிய அனைத்தையும் கணக்கிட்டுக் பேசுவார்” என்று சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில் ஹஸ்ஸி கூறினார்.
___________________
வித்தியசமான முறையில் அவுட்: வைரலாகும் இஷான் வீடியோ!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்., மும்பை அணியின் இஷான் கிஷான் விநோதமான முறையில் அவுட்டாகி வெளியேறிய வீடியோ வைரலாகி வருகிறது. 169 ரன்கள் என்ற இலகுவான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு ரோகித் ஷர்மா சிறப்பாக விளையாடி துவக்கம் தர, அவருக்கு துணையாக இஷான் கிஷன் நிலையான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர்கொண்ட முதல் 19 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே எடுத்து மிகப் பொறுமையாக ஆடினார் இஷான். ஆனால் ரவி பிஷ்னாய் வீசிய பந்தில் எதிர்பாராதவிதமாக இஷான் கிஷன் விநோதமாக அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
தூரமாகச் சென்ற பந்தை இஷான் அடிக்க, பந்து எட்ஜ் ஆகி லக்னோவின் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்கின் ஷூவில் பட்டு, எகிறி முதல் ஸ்லிப்பில் இருந்த ஜேசன் ஹோல்டரிடம் கேட்ச் ஆனது. மூன்றாம் நடுவர் இந்த அவுட்டை உறுதிசெய்ய நடையைக் கட்டினார். கூடவே மும்பையின் வெற்றியும் நடையைக் கட்டிவிட்டது. இஷான் கிஷன் விநோதமான அவுட்டான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
___________________
சாஹாவுக்கு மிரட்டல் விவகாரம்: பத்திரிகையாளர் மீது நடவடிக்கை?
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா. முன்னாள் கேப்டன் டோனியின் ஓய்வுக்கு பிறகு இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் தேர்வுசெய்யப்படவில்லை. தான் தேர்வு செய்யப்படாதது குறித்து அவர் பகிரங்க குற்றசாட்டை வெளியிட்டார். அதில் "தன்னை ஓய்வு பெறுமாறு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வற்புறுத்தியதாக தெரிவித்தார்.
இதன் பின்னர் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட விளையாட்டு பத்திரிகையாளர் குறுஞ்செய்தியின் மூலம் கேலி செய்தி மிரட்டியதாக விருத்திமான் சாஹா அடுத்த பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தார். இது குறித்து அந்த பத்திரிகையாளர் உடன் நடந்த உரையாடல் குறுஞ்செய்தியை விருத்திமான் சாஹா வெளியிட்டார். ஆனால் அந்த பத்திரிகையாளர் பெயரை அப்போது அவர் வெளியிடவில்லை. பின்னர் பிசிசிஐ விருத்திமான் சாஹா-விடம் முழுமையான விசாரணை நடத்தியது. இந்த நிலையில் அந்த பத்திரிக்கையாளர் மீது தற்போது பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
___________________
இயற்கை விவசாயத்திலும் ஆர்வம் காட்டும் டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவராக விளங்கி வந்த டோனி கடந்த 2019 ஆம் ஆண்டு அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வரும் அவர் விவசாய பண்ணை வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜாபுவாவிலிருந்து சுமார் 2,000 கடக்நாத் வகை கோழிக் குஞ்சுகளை வாங்கியுள்ளார்.
இது அந்த மாநிலத்தின் ஒரு வகையான நாட்டுக்கோழியாகும். கடக்நாத் கோழிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்த வகை கோழிகளில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. விளையாட்டு வீரர்களின் உணவு முறையில் இந்த கோழி இறைச்சி இருக்க வேண்டும் என ஆராச்சியாளர்கள் பிசிசிஐ-க்கு வலியுறுத்தி இருந்தனர். தனது ஓய்விற்கு பிறகு தொடர்ந்து விவசாயத்தில் டோனி ஆர்வம் காட்டி வருகிறார். தனது சொந்த மாநிலமான ராஞ்சியில் அவர் ஏற்கனவே இயற்கை முறையில் விவசாயம் நடக்கும் பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
__________________
ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் சாம்பியன்
ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் ஸ்டட்கர்ட் நகரில் நடைபெற்று வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் பெலாரஸைச் சேர்ந்த முன்னணி வீராங்கனையான சபலென்காவுடன் மோதினார்.
1 மணி 24 நிமிடங்கள் இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இகா ஸ்வியாடெக், 6-2, 6-2 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் ஸ்வியாடெக் தனது 7-வது டபிள்யூ.டி.ஏ டூர் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.