முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கிரிக்கெட் 38-வது லீக்: சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2022      விளையாட்டு
Punjab 2022-04-26

Source: provided

மும்பை : பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியின் அம்பதி ராயுடு, ஜடேஜா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது.

பந்துவீச்சு தேர்வு...

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 88 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். பனுகா ராஜபக்சே 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

188 ரன்கள் இலக்கு...

இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா ஒரு ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாண்ட்னர் 8 ரன்னும், ஷிவம் டுபே 9 ரன்னில் அவுட்டாகினர். 40 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அம்பதி ராயுடு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு கெய்க்வாட் ஒத்துழைப்பு கொடுத்தார். 4வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில் கெய்க்வாட் 30 ரன்னில் வெளியேறினார்.

ராயுடு 78 ரன்கள்...

அடுத்து இறங்கிய கேப்டன் ஜடேஜா, ராயுடுவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் ராயுடு அதிரடியில் இறங்கினார். கடைசி 5 ஓவரில் 70 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரில் ராயுடு 3 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க 23 ரன் கிடைத்தது. 17வது ஓவரில் 6 ரன் கிடைத்தது. 18வது ஓவரில் 6 ரன் எடுத்தனர். அதிரடியாக ஆடிய ராயுடு 39 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 19வது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 

பஞ்சாப் வெற்றி...

இதனால் கடைசி ஓவரில் சென்னை வெற்றி பெற 27 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில், சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணிக்கு கிடைத்த 4-வது வெற்றி இதுவாகும். 

6,000 ரன்களைக் கடந்தார் தவான்

நடப்பு ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் இரண்டு அரைசதங்களை பதிவு செய்துள்ளார். இதுவரையில் 202 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெல்லி, மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ், ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் என வெவ்வேறு அணிக்காக ஐ.பி.எல் அரங்கில் கிரிக்கெட் விளையாடியுள்ளார் தவான்.

இதன் மூலம் 6000 ரன்களை கடந்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை அணிக்கு எதிரான நடப்பு சீசனின் 38-வது லீக் போட்டியில் அவர் முதல் 2 ரன்கள் எடுத்த போது இந்த மைல்கல்லை அவர் எட்டினார். இந்தப் போட்டியில் அரைசதம் கடந்திருந்தார். 59 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து இறுதி வரை அவர் அவுட்டாகாமல் விளையாடினார். இதன் மூலம் ஐ.பி.எல் அரங்கில் 6000 ரன்களை கடந்த இரண்டாவது பேட்ஸ்மேன் ஆகியுள்ளார் அவர். முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி 215 போட்டிகள் விளையாடி 6,402 ரன்கள் எடுத்து ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரராக உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து