முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் பந்து வீசலாம் என நினைத்தேன்: சுவாரசிய நிகழ்வை பகிர்ந்தார் டோனி

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2022      விளையாட்டு
Dhoni-2022-04-28

பிராவோவிடம் கீப்பிங்கை கொடுத்து விட்டு நான் பந்து வீசலாம் என நினைத்தேன் சுவாரசிய நிகழ்வு குறித்து டோனி தனது கருத்தை பகிர்ந்துள்ளார். 

காணொளி காட்சி... 

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் 6-ல் தோல்வி கண்டு புள்ளிபட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் காணொளி காட்சி மூலம் சென்னை அணி வீரர்கள் டோனி, பிராவோ, ருதுராஜ் ஆகியோர் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது அவர்களிடம் ஒவ்வொரு புகைப்படப்பாக காண்பிக்கப்பட்டு அது குறித்து அவர்களுக்கு இருந்த நினைவுகள் பற்றி கேட்கப்பட்டது.

பந்து வீசலாம்... 

அப்போது ஒரு புகைப்படத்தை பார்த்து பதில் அளித்த டோனி, "ஒரு ஓவருக்கு பிராவோ 1 வைடு பந்துகளை மட்டுமே வீசலாம் எனவும் 3-4 வைடு பந்துகளை வீச கூடாது எனவும் நான் தெரிவித்தேன். பேட்ஸ்மேன்கள் பிராவோவின் பந்துகளை அடித்த விளையாடிய அந்த சமயத்தில் பிராவோவிடம் கீப்பிங்கை கொடுத்து விட்டு நான் பந்து வீசலாம் என நினைத்தேன. ஏனென்றால் என்னால் அதை விட மோசமாக பந்துவீச முடியாது " என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து