முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உம்ரான் மாலிக்கை பாராட்டிய கங்குலி

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2022      விளையாட்டு
Ganguly 2022-04-30

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனில் மிகச்சிறப்பாக பந்துவீசி வரும் பந்துவீச்சாளர்களில் ஒருவராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த உம்ரான் மாலிக் இருக்கிறார். 

இந்த தொடரில் மாலிக் இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 5 விக்கெட்டுகளை குஜராத் டைடன்ஸுக்கு எதிரான சன்ரைசர்ஸின் கடைசி போட்டியில் எடுத்தார்.இவர் தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி வருகிறார் .

இந்நிலையில்  இந்த தொடரில் கண்டறியப்பட்ட சிறந்த முகம் உம்ரான் மாலிக் தான் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில் ; 

மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, நான் [ஐபிஎல்] பார்க்கிறேன். எந்த அணியும் வெல்ல முடியும், எல்லோரும் நன்றாக விளையாடுகிறார்கள். இரண்டு புதிய அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சிறப்பாக செயல்படுகின்றன.

உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு கண்ணைக் கவர்கிறது . இந்த தொடரில் கண்டறியப்பட்ட சிறந்த முகம் உம்ரான் மாலிக் .இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து