முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் பவுத்த துறவிகள் பேரணி

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      உலகம்
Sri-Lanka-2022-05-01

Source: provided

கொழும்பு : இலங்கையில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு அமைக்கக் கோரி, ஆயிரத்திற்கும்மேற்பட்ட பவுத்த  துறவிகள் தலைநகா் கொழும்பில் பேரணி நடத்தினர். 

இந்தப் பேரணிக்கு மூத்த துறவி சிறீசுமன தலைமை வகித்தாா். அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், பிரதமா் மகிந்த ராஜபட்ச பதவி விலகி, ஓராண்டுக்கு அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் அமைய வழிவகுக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் அந்த அரசு சிறப்புக் குழுவால் நிா்வகிக்கப்படும்.

இதற்கு இலங்கை அரசிடமிருந்து சாதகமான பதில் வராவிட்டால், பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று கூறினார். முன்னதாக, இதே கோரிக்கையை முன்வைத்து அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு சிறீசுமன கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து