முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகள்களை போல் கட்டுப்பாட்டுடன் மகன்களையும் வளர்க்க வேண்டும் : பெற்றோர்களுக்கு கவர்னர் தமிழிசை அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      தமிழகம்
Tamilsai 2022-05-01

Source: provided

சென்னை : மகள்களை போல் மகன்களையும் கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார். 

சென்னையில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

மாணவர் பருவம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான பருவம். இந்த பருவத்தில் நன்றாக படிக்க வேண்டும். திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்லூரி வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். தப்பில்லை. ஆனால் எல்லாவற்றையும் ஒரு கட்டுப்பாட்டுடன் கொண்டாடுங்கள் அது உங்கள் வளர்ச்சிக்கு பலம் சேர்க்கும்.

படிப்பிலும் திறமைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவது போல் குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கையும் சரியான கால கட்டத்தில சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். நான் ஒரு மருத்துவர் என்ற ரீதியில் சொல்கிறேன். 

குழந்தை வளர்ப்பில் கவனமும், பாரபட்சமும் காட்டக் கூடாது. மகள்களாக இருந்தால் இத்தனை மணிக்குள் வீட்டுக்கு வந்து விட வேண்டும். ஆண்களுடன் பழகக்கூடாது. வெளியே சுற்றக்கூடாது. உடை விஷயத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகளை விதிக்கிறோம்.

அதை கண்காணிக்கிறோம். ஆனால் மகன்கள் விஷயத்தில் கண்டிப்பும், கட்டுப்பாடும் இல்லாததால் சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களை தடம் புரளவைக்கிறது. ஆண்களை சரிசெய்யும் போது பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். மகள்களை போல் மகன்களையும் கட்டுப்பாட்டுடன் வளருங்கள். இவ்வாறு அவர் பேசினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து