முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய பில்கேட்ஸ் விருப்பம்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2022      உலகம்
Billgates 2022 05 03

Source: provided

வாஷிங்டன் : விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய பில்கேட்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான பில்கேட்ஸ் கடந்த 1994-ம் ஆண்டு மெலிண்டா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.  கடந்த ஆண்டு மே மாதம் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர்.

இந்த நிலையில் பில் கேட்ஸ் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு நான் மெலிண்டாவை விட்டு தனியாக பிரிந்தேன். நான் அப்படி வாழ்க்கையில் மாற்றம் செய்து இருக்கக் கூடாது. நான் செய்ததை தவறாக நினைக்கிறேன். மெலிண்டாவை விட்டு பிரிந்த பிறகு நான் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளவில்லை. அது உங்கள் அனைவருக்குமே தெரியும்.

மெலிண்டா மீது நான் இன்னும் பாசத்துடனே இருக்கிறேன்.  மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள நான் விரும்புகிறேன். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறேன். மெலிண்டாவிடம் இருந்து நான் முழுமையாக விலகி செல்லவில்லை. நட்போடு தான் இருக்கிறேன். 

எங்கள் நிறுவனத்தின் நலத்திட்ட அமைப்பு தொடர்பான ஆண்டு கூட்டத்தில் மெலிண்டாவை நான் சந்தித்தேன். அப்போது நாங்கள் இருவரும் ஒன்றாக உணவருந்தினோம். ஒன்றாக சேர்ந்து வாழ வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோம். இவ்வாறு பில்கேட்ஸ் கூறியுள்ளார். அவரது இந்த கருத்துக்கு மெலிண்டா தரப்பில் இருந்து இன்னமும் பதில் தெரிவிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து