தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை 8.37 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். வினாத்தாள் அறையின் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் வினாத்தாள் அறை அருகே யாராவது செல்கிறார்களா? என்பது 24 மணி நேரமும் தொடர்ந்து ரகசியமாக கண்காணிக்கப்படுகிறது. வினாத்தாள் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை ...
தமிழகத்தில் பிளஸ்2 மாணவர்களுக்கு நாளை (5ம் தேதி) பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வினை பள்ளிகளில் பயிலும் 8.37 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தமிழகம் முழுவதும் 3119 மையங்களில் இத்தேர்வினை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந்தேதி 3,936 மையங்களில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை 9.55 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
கல்வி அதிகாரிகளுக்கு...
அதனைத் தொடர்ந்து பிளஸ்1 பொதுத்தேர்வு 10ந்தேதி தொடங்குகிறது. 5ந்தேதி தொடங்கும் பொதுத்தேர்வு 31ந்தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை பள்ளிகள் வழியாக மட்டும் 26 லட்சத்து 76 ஆயிரத்து 675 மாணவ-மாணவிகள் எழுதுவதற்கு தயாராக உள்ளனர். பொதுத்தேர்வினை எந்த ஒரு சர்ச்சைக்கும் இடமளிக்காத வகையில் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு...
பிளஸ்2 திருப்புதல் தேர்வு கடந்த மாதம் நடந்தபோது ஒரு சில இடங்களில் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாக வெளியாகி கல்வித்துறையை அதிர்ச்சி அடையச் செய்தது. தொடர்ந்து நடந்த 3 தேர்வுகளின் வினாத்தாள்கள் அடுத்தடுத்து கசிந்ததால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடு...
திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிந்ததுபோல பொதுத்தேர்வில் வெளியானால் கல்வித்துறையின் மீது பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் நம்பிக்கை இழக்கக்கூடும் என்பதால் அனைத்து மாவட்டத்திலும் மிக கவனமாக செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளது.
தேர்வுத்தாள்கள்...
நாளை தேர்வு தொடங்க இருப்பதால் வினாத்தாள்கள் அனைத்தும் சென்னையில் இருந்து தனித்தனி வாகனங்களில் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த வாகனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றடைந்தன. அன்றே அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தேர்வுத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. அந்த அறை அருகே தேவையில்லாமல் யாரும் செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக செல்போனுடன் வினாத்தாள் பாதுகாப்பு அறைக்குள் யாரும் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
30 நிமிடங்களுக்குள்...
தேர்வு பணியில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் மட்டுமின்றி ரகசியங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக 30 நிமிடங்களுக்குள் வினாத்தாள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுவரையில் இல்லாத அளவிற்கு வினாத்தாள் பாதுகாப்பு அறைக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்வுத்துறை தயாரித்து வழங்கும் வினாத்தாள்கள் பாடம் வாரியாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளது.
துப்பாக்கி ஏந்திய....
அந்த வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் வினாத்தாள் அறை ‘சீல்’ வைத்து மூடப்பட்டு உள்ளது. “ஸ்ட்ராங் ரூம்” என்று சொல்லக்கூடிய அந்த அறையில் வினாத்தாள் கட்டுகள் வைத்து பாதுகாக்கப்படும். அந்த அறையை 24 மணி நேரமும் போலீசார் கண்காணிக்கிறார்கள். வினாத்தாள் அறையின் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் வினாத்தாள் அறை அருகே யாராவது செல்கிறார்களா? என்பது 24 மணி நேரமும் தொடர்ந்து ரகசியமாக கண்காணிக்கப்படுகிறது.
போலீசாருக்கு....
வினாத்தாள் வைக்கப்பட்டு உள்ள அறை பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வெளியாட்கள் செல்ல அனுமதி இல்லை. மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அங்கு வரக்கூடியவர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்ய நோட்டு புத்தகமும் போடப்பட்டு உள்ளது. அந்த பகுதிக்கு செல்லக்கூடியவர்கள் அதில் தங்கள் பெயர் விவரங்கள் மற்றும் வருகையின் நோக்கம் குறித்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
16 இடங்களில்...
ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து வினாத்தாள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை மாவட்டத்தில் 16 இடங்களில் வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் 5 முதல் 10 மையங்கள் வரை அமைக்கப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கேரட் லட்டு![]() 6 hours 45 sec ago |
KFC Style பிரைடு சிக்கன்![]() 4 days 6 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 06-07-2022.
06 Jul 2022 -
இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
05 Jul 2022மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
-
மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் திரிபுரா முதல்வர்
05 Jul 2022புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவியை திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா ராஜினாமா செய்தார்.
-
இலங்கை மக்களுக்கு உதவ தமிழக போலீசார் ரூ. 1.40 கோடி நிவாரண நிதி : முதல்வர் ஸ்டாலினிடம் டி.ஜி.பி. வழங்கினார்
06 Jul 2022சென்னை : இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலீசார் சார்பில் 1.40 கோடி நிதி பெறப்பட்டது.
-
அடிப்படை வசதிகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்
06 Jul 2022சென்னை : தமிழகத்தில் அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம
-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
06 Jul 2022காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.
-
அரசியல்வாதிகளை தொடர்பு கொள்ளக்கூடாது: பாக். ராணுவ அதிகாரிகளுக்கு தளபதி அதிரடி உத்தரவு
06 Jul 2022இஸ்லாமாபாத் : அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா
06 Jul 2022சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்பு மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
-
டெல்லியில் இன்று நடைபெறவிருந்த 16-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
05 Jul 2022புதுடெல்லி : டெல்லியில் இன்று நடைபெறவிருந்த 16-வது கூட்டம் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் 3- வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள்: சென்னையில் திருவுருவ சிலைக்கு இன்று அமைச்சர்கள் மரியாதை
06 Jul 2022சென்னை : இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் 07.07.2022 அன்று காலை 09.30 மணியளவில் சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்
-
உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் இருந்து வெளியேற மக்களுக்கு உத்தரவு
06 Jul 2022கீவ் : ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைவதாலும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி டொனேட்ஸ்க் மாகாண கவர்னர்
-
தொடர் மழை: முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
06 Jul 2022கம்பம் : முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
-
நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம்: மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது
06 Jul 2022சென்னை : நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
-
ரூ. 489 கோடி செலவில் வர்ணம் பூசப்படும் பிரான்சின் ஈபிள் கோபுரம்
06 Jul 2022பாரீஸ் : ரூ. 489 கோடி செலவில் ஈபிள் கோபுரம் வர்ணம் பூசப்பட்டு வருவதாக நிபுணர்களின் ரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இங்கிலாந்தின் புதிய நிதி மற்றும் சுகாதார அமைச்சர்கள் நியமனம் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
06 Jul 2022லண்டன் : இங்கிலாந்தின் புதிய நிதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரை நியமித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார்.
-
3-வது நாளாக தொடரும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
06 Jul 2022சென்னை : கண்டெய்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பதால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி முற்ற
-
கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய அன்புமணி கோரிக்கை
06 Jul 2022சென்னை : சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஐ.நா. அமைதி படையின் புதிய கமாண்டர் நியமனம் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
06 Jul 2022சென்னை : இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
-
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2022-ல் 10,000 ஆசிரியர்கள் தேர்வு
06 Jul 2022சென்னை : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட ஆண்டு திட்டத்தின்படி, இந்த ஆண்டு 10,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்
-
பூரண குணமடைந்தார் இயக்குனர் டி.ராஜேந்தர்
06 Jul 2022சென்னை : மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற இயக்குனர் டி.ராஜேந்தர் பூரணமாக குணமடைந்துள்ளார்.
-
வேடசந்தூர் குடகனாறு அணையில் இருந்து இன்று முதல் நீர் திறக்க அரசு உத்தரவு
06 Jul 2022சென்னை : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குடகனாறு அணையில் இருந்து இன்று முதல் 16 நாட்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ஏமனில் ராணுவ தள ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடிவிபத்து: 6 பேர் பலி
06 Jul 2022சனா : ஏமன் நாட்டின் ராணுவ தளத்தில் உள்ள ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
கடும் வறட்சி எதிரொலி: இத்தாலியில் 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்
06 Jul 2022ரோம் : இத்தாலியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக கடும் வறட்சி நீடிக்கிறது. இதனைத் தொடர்ந்து அங்கு 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
-
பணியின் போது விபத்தில் உயிரிழந்த 60 கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரண தொகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Jul 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த 60 கட்டுமா
-
ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த டைசல் நிறுவனத்துடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
06 Jul 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தலைமைச்செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், உயிரி தொழில்நுட்ப கல்வி மற்