எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வருபவர் ஹசன் அலி. பவுலரான அவர் மூன்று பார்மெட்டுகளையும் சேர்த்து 223 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2021 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் அவர் கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார். அப்போது முதலே அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹசன் அலி பேசியுள்ளார்.
தற்போது கவுன்டி கிரிக்கெட்டில் லங்காஷயர் அணிக்காக விளையாடுவதற்காக இங்கிலாந்தில் உள்ளார் ஹசன் அலி. அவர் பேசுகையில் "ஒட்டுமொத்தமாக அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் நான் சிறப்பாக விளையாடி உள்ளேன். அறிமுகமான நாள் முதல் தேசிய அணியில் நான் தான் இரண்டாவது சிறந்த பவுலராக உள்ளேன். அப்படி இல்லையெனில் முதலிடம். ஒரு வீரரால் எல்லா நேரமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. கடந்த காலங்களில் இது மாதிரியான விமர்சனங்களை பல ஜாம்பவான்கள் எதிர்கொண்டுள்ளனர். என்னிடம் விடாமுயற்சி உள்ளது. அதன் மூலம் எனது குறைகளை நிறைகளாக மாற்றுவேன். அதனால் தான் பாபர் ஆஸம் என்னை ஆதரிக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
____________
ஆஸி. அணியின் உதவி பயிற்சியாளர் நியமனம்
ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்த ஜஸ்டின் லாங்கரின் 4 வருட பதவி காலம் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் மெக்டோனால்ட் பதவியேற்றார். இந்நிலையில் உதவி பயற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் போது ஆஸ்திரேலியா அணிக்கு தற்காலிக அறிவுரையாளராக டேனியல் விட்டோரி இருந்தார். இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளருடன் சேர்ந்து விட்டோரி, மைக்கேல் டி வெனுடோ தனது பணியை தொடர்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
_____________
நடப்பு ஐ.பி.எல் தொடரில் மிரள வைக்கும் ரசிகர்களின் பேனர்கள்
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் யாரும் எதிர்ப்பார்க்காத சென்னை, மும்பை அணிகள் கடைசி 2 இடத்தைப் பிடித்துள்ளது. இந்த சீசனில் ரசிகர்களின் பேனர் வசனங்கள் கிரிக்கெட் வீரர்களை மட்டுமல்லாமல் ஐபிஎல் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது.
பெங்களூர்-மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் விராட் கோலி ரசிகையின் பேனர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ரசிகை கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துள்ளார். போட்டியின் போது வைத்திருந்த பேனரில் விராட் கோலி தனது 71-வது சதத்தை எப்போது அடிக்கிறாறோ அப்போதுதான் நான் டேட்டிங் செய்வதாக இருந்தது. இந்த வாசகம் சமூக வலைதளங்களில் வைரலானது.
________________
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரஷ்ய அணிகளுக்கு தடை
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கு பல்வேறு விளையாட்டு அமைப்புகள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு ரஷியா மீது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அடுத்த சீசன் சாம்பியன் லீக் மற்றும் பிற அனைத்து ஐரோப்பிய போட்டிகளிலும் ரஷிய கிளப் கால்பந்து அணிகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை ஐரோப்பிய கால்பந்து சங்க நிர்வாக குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “2022-23ம் ஆண்டு சீசனில் கிளப் போட்டிகளில் எந்த ரஷிய கிளப் அணிகளும் விளையாட அனுமதி கிடைக்காது. மேலும் அறிவிப்பு வரும் வரை ரஷிய கிளப் அணிகள் மற்றும் தேசிய அணிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தில் ஜூலை மாதம் நடக்கும் பெண்கள் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து ரஷிய அணி விலக்கப்பட்டது. அதற்கு பதில் போர்ச்சுக்கல் அணி இடம் பெற்றது. மேலும் 2028 அல்லது 2032ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி நடத்தும் ரஷியாவின் முயற்சியும் தகுதி இல்லாதது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
_____________
ஐதராபாத் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு மீண்டும் காயம்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் கை பெருவிரலுக்கும், அதற்கு அடுத்த விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 3 லீக் ஆட்டங்களை தவற விட்டு அணிக்கு திரும்பினார்.
இந்த நிலையில் புனேயில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்யும் போது அதே கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அந்த ஆட்டத்தில் பந்து வீசவில்லை. வாஷிங்டன் சுந்தர் காயம் குறித்து ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி கருத்து தெரிவிக்கையில், ‘வாஷிங்டன் சுந்தர் காயத்துக்கு தையல் போட வேண்டியது இருப்பதால் அவர் டெல்லிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் (வருகிற 5-ந் தேதி) விளையாடுவது சந்தேகம் தான். எங்களது முக்கிய பவுலர்களில் ஒருவரான வாஷிங்டன் சுந்தர் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் எதிர்பாராதவிதமாக பந்து வீச முடியாமல் போனது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது’ என்றார்.
________________
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பூரன் நியமனம்
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒருநாள் போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் அதிரடியாக ஆடி ஆல்ரவுண்டராக செயல்பட்டு வருபவர் பொல்லார்டு. வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக செயல்பட்டு வந்தவர் கெய்ரன் பொல்லார்டு. இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்தார்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டி கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.