முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளே ஃஆப் சுற்று, இறுதிப்போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 மே 2022      விளையாட்டு
IPL 2022 05 03

ஐ.பி.எல் 2022 - பிளே ஆப், இறுதிப்போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜெய்ஷா அறிவிப்பு...

ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன்  கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலால் ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் மும்பை மற்றும் புனே நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்களை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார் .

அகமதாபாத்தில்...

அதன்படி, முதல் பிளே ஆப் சுற்று மற்றும் எலிமினேட்டர் சுற்று போட்டிகள் கொல்கத்தாவிலும், இரண்டாவது பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்திலும் நடைபெறும் என தெரிவித்துள்ளார் முதல் தகுதிச்சுற்று  மே 24 அன்றும், எலிமினேட்டர் சுற்று போட்டி மே 25-ம் தேதிகளில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2-வது தகுதிச்சுற்று  மே 27 அன்றும், இறுதிப்போட்டி மே 29 அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும் நடைபெறவுள்ளது. பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டிக்கு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து