முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து பேட்டிங்கில் தடுமாற்றம்: ரோகித் சர்மா குறித்து ஜெயவர்த்தனே கருத்து

வியாழக்கிழமை, 5 மே 2022      விளையாட்டு
jayavarthan-2022-05-05

Source: provided

மும்பை: தொடர்ந்து பேட்டிங்கில் தடுமாற்றம் ரோகித் சர்மா குறித்து ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை

8 ஆட்டங்களில்...

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் 1வெற்றி  ,8  தோல்வி என புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது .

பின்னடைவு...

இந்த தொடரில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை . விளையாடிய 9 போட்டியில்  155 ரன்களை  மட்டும் எடுத்திருக்கிறார். அவரது பேட்டிங் பார்ம் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நன்றாக தொடக்கம்... 

இந்நிலையில் இது குறித்து மும்பை அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே கூறுகையில்., ரோகித் சர்மா  நீண்ட காலமாக பேட்டிங்கில் சிறப்பாக செயல்ப்பட்டு வந்தார், தொடர்ந்து பெரிய அளவில் ஸ்கோர் செய்தார், தற்போது அவருக்குத் நன்றாக தொடக்கம் கிடைக்கிறது. ஆனால்  அதனை (ரன்கள் ) பெரிய அளவில் அவரால் மாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து