முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் சமூகநீதி கண்காணிப்பு குழுவிற்கான புதிய அலுவலகம் : அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 6 மே 2022      தமிழகம்
Keetha 2022 05 06

Source: provided

சென்னை : சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்கு சொந்தமான கட்டிடத்தில், 2243 சதுர அடி பரப்பளவுடைய அறையில் சமூக நீதிக் கண்காணிப்பு குழுவிற்கான புதிய அலுவலகத்தை  அமைச்சர் கீதா ஜீவன் நேற்று திறந்து வைத்தார். 

முன்னதாக கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அளவுகோல்கள் முறையாக முழுமையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க சமூக நீதிக் கண்காணிப்புக் குழு ஒன்றினை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டிருந்தார். அதை தொடர்ந்து சென்னை அண்ணாசாலையில் சமூக நீதி கண்காணிப்பு குழுவிற்கான புதிய அலுவலகத்தை நேற்று அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

 

இந்நிகழ்வில், சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், உறுப்பினர்கள் முனைவர் கே. தனவேல் (ஓய்வு), பேராசிரியர் முனைவர். சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஜெய்சன், பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன், கருணாநிதி, மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் மற்றும் சமூக சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) மங்கத் ராம் சர்மா, ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து