முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புழல் மத்திய சிறையில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 58 கைதிகள்

வெள்ளிக்கிழமை, 6 மே 2022      தமிழகம்
Central-Jail 2022 05

Source: provided

புழல் : புழல் மத்திய சிறையில் நேற்று காலை 58 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள தேர்வு மையத்தில் நேற்று காலை 10ம் வகுப்பு பொது தேர்வு துவங்கியது. இதில் தண்டனை பிரிவை சேர்ந்த 39 பேர், விசாரணை பிரிவில் 11 பேர், பெண்கள் பிரிவில் 8 பேர் என மொத்தம் 58 பேர் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். 

தேர்வு மையத்தை சிறைத்துறை துணை தலைவர் முருகேசன் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  மேலும், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் அனைத்து கைதிகளும் வெற்றி பெற சிறைத்துறை துணை தலைவர் முருகேசன் வாழ்த்து தெரிவித்தார்.

சிறை வளாகத்தில் பொது தேர்வு நடைபெறுவதால் அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று முன்தினம் புழல் மத்திய சிறை வளாகத்தில் தண்டனை பிரிவில் 12 பேர், விசாரணை பிரிவில் ஒன்று, பெண்கள் பிரிவில் 4 பேர் என மொத்தம் 17 பேர் பிளஸ் 2 பொது தேர்வு எழுதியது என குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து