முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த வருடம் தென்னாப்பிரிக்காவில் தொடங்கும்: புதிய டி - 20 போட்டியில் பங்கேற்க சி.எஸ்.கே உள்ளிட்ட 4 அணிகள் ஆர்வம்

வெள்ளிக்கிழமை, 6 மே 2022      விளையாட்டு
CSK 2022 05 06

தென்னாப்பிரிக்காவில் அடுத்த வருடம் தொடங்கவுள்ள டி20 போட்டியில் ஓர் அணியை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 4 ஐ.பி.எல் அணிகள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

புதிய டி-20 லீக்...

2023 ஜனவரியில் புதிய டி20 லீக் போட்டியைத் தொடங்கவுள்ளது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். சூப்பர் ஸ்போர்ட் ஊடகத்துடன் இணைந்து இப்போட்டியை நடத்தவுள்ளது. தனியார் நிறுவனங்களின் சார்பில் ஆறு அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. மொத்தம் 33 ஆட்டங்கள். இதற்கு முன்பு 2017 முதல் 2019 வரை இரு டி20 போட்டிகளை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடத்தியுள்ளது. ஐ.பி.எல் போட்டிக்கு அடுத்ததாக உலகின் 2-வது சிறந்த டி20 போட்டியாக இது உருவாக வேண்டும் என்கிற லட்சியத்துடன் பணிகளைத் தொடங்கியுள்ளது தெ.ஆ. கிரிக்கெட் வாரியம். 

4 அணிகள் ஆர்வம்...

இந்நிலையில் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், தில்லி கேபிடல்ஸ் மற்றும் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தலைமையில் இயங்கும் ஒரு கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்கள் தெ.ஆ. டி20 போட்டியில் ஓர் அணியை வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளன. ஐ.பி.எல் போட்டியில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய சுந்தர் ராமன், இப்போட்டியில் 12.5% பங்குகளை வாங்கியுள்ளார். ஐ.பி.எல் அணிகளின் பங்களிப்பில் தெ.ஆ. டி20 போட்டி நடைபெறும் சூழல் உருவாகியுள்ளதால் இப்போட்டி நிச்சயம் ரசிகர்களைக் கவரும் விதத்தில் இருக்கும் என நம்பலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து