எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை கடந்த மாதம் ரூ.268.50 உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை ரூ. ஆயிரத்தை தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல் - டீசல்...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்பவும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பவும் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் வருவாய் இழப்புக்கு ஏற்ப அதை சரிக்கட்டும் வகையில் விலை உயர்வை அறிவிக்கின்றன. அந்த வகையில் கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை அடுத்தடுத்து உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து விற்பனையாகி கொண்டு இருக்கிறது.
வணிகத்திற்கான கியாஸ்...
இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை 250 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. அதன் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை 2,355 ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை அனைத்தும் உயர்ந்து விட்டன. ஓட்டல்களில் இட்லி, தோசை உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டன.
சமையல் கியாஸ்...
இந்த நிலையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நேற்று திடீரென வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் விலையை உயர்த்தி உள்ளன. சிலிண்டருக்கு 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் இந்த விலை உயர்வு உடனே அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரித்து இருக்கிறது.
விலை மேலும்...
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.965 ஆக இருந்தது. 50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதால் சிலிண்டர் விலை ஆயிரத்தை கடந்து உள்ளது. இனி ஒரு சிலிண்டர் சமையல் கியாசுக்கு பொதுமக்கள் 1,015 ரூபாய் கொடுக்க வேண்டும். அதே சமயத்தில் மானியம் பெறுவது குறைந்து கொண்டே இருக்கிறது. சிலிண்டருக்கு 25 ரூபாய் கூட யாருக்கும் மானியம் கிடைப்பது இல்லை. ஆனால் சிலிண்டர் விலை மட்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்ந்து கொண்டே செல்கிறது.
கடும் அதிருப்தி...
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை திடீரென உயர்த்தப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். சாதாரண ஏழை-எளிய மக்களை இந்த விலை உயர்வு மிக கடுமையாக பாதிக்கும் என்று தெரியவந்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றால் பொதுமக்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது சமையல் கியாஸ் விலை உயர்வதால் இது தங்களுக்கு மேலும் கூடுதல் சுமையாக இருக்கும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.
10 மாதங்களில்...
கடந்த 10 மாதங்களில் 6 தடவை சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 825 ரூபாயாக இருந்தது. ஜூலை மாதம் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டதால் ஒரு சிலிண்டர் விலை ரூ.850 ஆக உயர்ந்தது. ஆகஸ்டு மாதம் 25 ரூபாய் உயர்ந்து ரூ.875 ஆகவும், செப்டம்பர் மாதம் 25 ரூபாய் அதிகரித்து ரூ.900 ஆகவும் சிலிண்டர் விலை இருந்தது. அக்டோபர் மாதம் 15 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.915 ஆக உயர்ந்தது.
ஆயிரத்தை கடந்தது...
நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி , மார்ச் மாதங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. ஏப்ரல் மாதம் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.965 ஆக உயர்ந்தது. கடந்த மாதத்தைப் போலவே இந்த மாதமும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் சிலிண்டர் விலை வரலாற் றில் முதல் முறையாக ஆயிரம் ரூபாயை கடந்து இருக்கிறது. இது சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும் என்று பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.