தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மக்களுக்கு பயன்தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுக-வின் ஓராண்டு ஆட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழ சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "2021ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலில், திமுக-வின் பொய்யான, போலியான, நிறைவேற்ற முடியாத, சாத்தியமற்ற வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்ததன் விளைவாக தமிழகத்தில் திமுக ஆட்சி துரதிர்ஷ்டவசமாக அமைந்துவிட்டது. இதன் காரணமாக, கடந்த ஓராண்டில் பொதுமக்கள் இன்பங்களை மறந்து துன்பங்களை மட்டுமே அனுபவித்து வருகின்றனர். மக்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி திமுக-விற்கு வாக்களித்தார்களோ அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
உதாரணமாக, திமுக-வின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று நீட் தேர்வு ரத்து. நீட் தேர்வை ரத்து செய்ய கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்று திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஓரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மேடைக்கு மேடை தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர்களால் பேசப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டாகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.
அடுத்த முக்கியமான வாக்குறுதி கல்விக் கடன் ரத்து. "30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்" என்று திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஓராண்டாகியும் இது குறித்து திமுக அரசு வாய் திறக்கவில்லை.
மற்றொரு முக்கியமான வாக்குறுதி நகைக் கடன் ரத்து. திமுக அரசு அமைந்ததும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகைகள் ரத்து செய்யப்படும் என திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது ஒருபுறம் என்றால், "நகைக் கடன் வாங்காதவர்கள் எல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள், ஸ்டாலின்தான் ஆட்சிக்கு வரப் போகிறார், எல்லா கடனையும் தள்ளுபடி செய்துவிடுவார்" என்ற பிரச்சாரம் வேறு மறுபுறம். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து கிட்டத்தட்ட 75 விழுக்காடு பயனாளிகளின் நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என அரசு அறிவித்தது.
மகளிர் எதிர்பார்த்த முக்கியமான வாக்குறுதி மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை. பெரும்பாலானோர் இந்த வாக்குறுதியை நம்பி திமுக-விற்கு வாக்களித்தார்கள். தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை என்று குறிப்பிட்விட்டு, நிதிநிலை அறிக்கையில் இது ஏழ்மையானவர்களுக்கான திட்டம் என்று திமுக அரசு கூறுகிறது. இதன்மூலம், மொத்த மகளிரில் பத்து விழுக்காட்டிற்கும் குறைவான மகளிருக்கு அளித்துவிட்டு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்று கூறிக் கொள்ளப் போகிறது திமுக இது ஒருவிதமான ஏமாற்று வேலை. இதேபோன்று, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்ற வாக்குறுதியை திமுக அறிவித்தது. எரிவாயுவை வீடுகள்தோறும் வழங்கும் பணியை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்படவில்லை, நேர்மையான, சுதந்திரமான, நியாயமான, நீதி தவறாத ஆட்சி நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை. மக்கள் அன்றாடம் வேதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு தான் இப்படி என்றால், மின்சாரத் துறை இதைவிட மோசமாக இருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே மின்வெட்டு என்பது அடிக்கடி ஏற்படுகிறது
திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது, கட்டுமானப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டே இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது என்ற வாக்குறுதியையும் மீறி, சொத்து வரியையும், குடிநீர் வரியையும் உயர்த்தி எரிகிற நெருப்பில் எண்ணெயை திமுக ஊற்றியிருக்கிறது.
நீட் தேர்வு ரத்து பிரச்சினையில் மேதகு ஆளுநரை எதிர்க்கின்ற திமுக அரசு, வரிப் பகிர்வு விஷயத்தில் மத்திய அரசை எதிர்க்கின்ற திமுக அரசு, முல்லைப் பெரியாறு விஷயத்தில் பல்வேறு இடையூறுகளை தமிழகத்திற்கு அளித்துக் கொண்டிருக்கின்ற கேரள அரசை எதிர்க்கவோ, மேகதாது அணைப் பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்க்கவோ திமுக தயக்கம் காட்டுவது வியப்பாக இருக்கிறது. ஒருவேளை இதுதான் திராவிட மாடல் போலும்! மொத்தத்தில், மக்களுக்குப் பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுக-வின் ஓராண்டு ஆட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கேரட் லட்டு![]() 6 hours 45 sec ago |
KFC Style பிரைடு சிக்கன்![]() 4 days 6 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 06-07-2022.
06 Jul 2022 -
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்
05 Jul 2022லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது : சானியா - மேட் பேவிக் ஜோடி
05 Jul 2022லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
-
இங்கி.க்கு எதிராக தாமதமான பந்துவீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்
05 Jul 2022பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
-
வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்
05 Jul 2022பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
-
கடைசி டெஸ்டில் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய ரசிகர்கள் விசாரிக்க இங்கி. கிரிக்கெட் வாரியம் உத்தரவு
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
-
சதமடித்த ரூட், பேர்ஸ்டோ அபாரம்: 5-வது டெஸ்டை வென்று சாதனையுடன் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்துள்ளது.
-
கடந்த 18 மாதங்களில் மட்டும் 11 சதங்கள் விளாசிய ஜோ ரூட்
05 Jul 2022பார்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் பிரபல பேட்டர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியுள்ளார்.
-
இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
05 Jul 2022மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
-
மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் திரிபுரா முதல்வர்
05 Jul 2022புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவியை திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா ராஜினாமா செய்தார்.
-
இலங்கை மக்களுக்கு உதவ தமிழக போலீசார் ரூ. 1.40 கோடி நிவாரண நிதி : முதல்வர் ஸ்டாலினிடம் டி.ஜி.பி. வழங்கினார்
06 Jul 2022சென்னை : இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலீசார் சார்பில் 1.40 கோடி நிதி பெறப்பட்டது.
-
டெல்லியில் இன்று நடைபெறவிருந்த 16-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
05 Jul 2022புதுடெல்லி : டெல்லியில் இன்று நடைபெறவிருந்த 16-வது கூட்டம் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் 3- வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
06 Jul 2022காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.
-
அடிப்படை வசதிகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்
06 Jul 2022சென்னை : தமிழகத்தில் அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம
-
அரசியல்வாதிகளை தொடர்பு கொள்ளக்கூடாது: பாக். ராணுவ அதிகாரிகளுக்கு தளபதி அதிரடி உத்தரவு
06 Jul 2022இஸ்லாமாபாத் : அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா
06 Jul 2022சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்பு மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
-
இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள்: சென்னையில் திருவுருவ சிலைக்கு இன்று அமைச்சர்கள் மரியாதை
06 Jul 2022சென்னை : இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் 07.07.2022 அன்று காலை 09.30 மணியளவில் சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்
-
உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் இருந்து வெளியேற மக்களுக்கு உத்தரவு
06 Jul 2022கீவ் : ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைவதாலும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி டொனேட்ஸ்க் மாகாண கவர்னர்
-
தொடர் மழை: முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
06 Jul 2022கம்பம் : முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
-
ரூ. 489 கோடி செலவில் வர்ணம் பூசப்படும் பிரான்சின் ஈபிள் கோபுரம்
06 Jul 2022பாரீஸ் : ரூ. 489 கோடி செலவில் ஈபிள் கோபுரம் வர்ணம் பூசப்பட்டு வருவதாக நிபுணர்களின் ரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம்: மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது
06 Jul 2022சென்னை : நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
-
இங்கிலாந்தின் புதிய நிதி மற்றும் சுகாதார அமைச்சர்கள் நியமனம் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
06 Jul 2022லண்டன் : இங்கிலாந்தின் புதிய நிதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரை நியமித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார்.
-
கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய அன்புமணி கோரிக்கை
06 Jul 2022சென்னை : சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஐ.நா. அமைதி படையின் புதிய கமாண்டர் நியமனம் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
06 Jul 2022சென்னை : இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
-
3-வது நாளாக தொடரும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
06 Jul 2022சென்னை : கண்டெய்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பதால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி முற்ற