முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுகலை நீட் தேர்வு மே 21-ல் திட்டமிட்டபடி நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு

சனிக்கிழமை, 7 மே 2022      இந்தியா
Need 2022 02 04

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு என்ற தகவல் போலியானது என்றும், முதுகலை நீட் தேர்வு மே 21-ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

முதுகலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் என்றும், தேசிய தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளத்தில் போலியான தகவல் பரவியது. இந்த தகவலை தேசிய தேர்வு வாரியம் மறுத்துள்ளது. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இணையத்தில் பரவும் தகவல் போலியானது என்று கூறிய தேசிய தேர்வு வாரியம், திட்டமிட்டபடி தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் பரவும் போலியான தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என்றும், தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://natboard.edu.in  வரும் அறிவிப்புகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு தொடர்பான தகவல்களை பெறுவதற்கு 011-45593000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து