முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்முறை எதற்கும் உதவாது: மக்கள் பொறுமை காக்க வேண்டும்; இலங்கை அதிபர், பிரதமர் கோரிக்கை

திங்கட்கிழமை, 9 மே 2022      உலகம்
Gotabhaya-Mahinda 2022 05 0

Source: provided

கொழும்பு : இலங்கை மக்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.  இதனால் நாட்டில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. 

நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. 

இலங்கையின் அதிபர் மாளிகை முன்பாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, கொழும்புவில் ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று மோதல் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் 23- பேர் காயம் அடைந்தனர். இதனால், இலங்கையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இலங்கை மக்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கோத்தபய ராஜபக்சே தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 

“தற்போது நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை வன்மையாக கண்டிக்கின்றேன். அனைத்து குடிமக்களும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

மகிந்த ராஜபக்சே அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில்,  பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.   வன்முறை வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு பொருளாதார தீர்வு தேவை, அதை தீர்க்க இந்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து