முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆலோசனை

புதன்கிழமை, 11 மே 2022      தமிழகம்
Sivasanger 2022 05 11

Source: provided

சென்னை :  அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்  நேற்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.

தமிழக முதல்வரின் அறிவுரையின் பேரில், அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்  தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால் மற்றும் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

 இக்கூட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் மற்றும் செலவீனங்களைக் குறைத்து நிதி நிலையினை மேம்படுத்துதல் குறித்தும், இன்று (12.05.2022) நடைபெற உள்ள போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குறித்தும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.  

அப்போது பேருந்துகள் இயக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்போது முதலமைச்சரின் மகளிருக்கான இலவச பயணத்தை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் எழுப்பிய கேள்விக்கு அலுவலர்கள் பதிலளிக்கையில்,

தமிழகம் முழுவதும் சாதாரணக் கட்டண பேருந்து அறிவிப்புக்கு முன்னர் (அதாவது 07.05.2021-க்கு) சாதாரண கட்டண பேருந்துகளின் எண்ணிக்கை 5,865 ஆகவும், தற்போது 7,321 ஆகவும் அதிகரித்து மகளிர் பயணம் செய்யும் வகையில் உள்ளதாகவும், தற்போது, அதிக மகளிர் எளிதில் பயணம் செய்யும் வகையில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  தற்போது அதிக மகளிர் கட்டணமில்லாத பயணம் செய்வதாகவும், சாதாரண கட்டண பயணிகளில் மகளிரின் பங்கு 40 சதவிகிதத்தில் இருந்து 62 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும், 10.05.2022 வரை 110.37 கோடி மகளிர் பயணம் செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், தற்போது 2022-23 ஆண்டிற்கான சட்டசபையில் அறிவித்துள்ள அறிவிப்புகளில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை/பணப் பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறையினை அறிமுகப்படுத்துதல், பயணக்கட்டணச் சலுகை அனுமதி சீட்டுகளை வலைதளம் வாயிலாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.  அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் பொதுவாக ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம் அமைத்தல், மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகரங்களில் உள்ள 16 பேருந்து முனையங்களில்  தகவல் பலகை மூலம் இணையவழி பயணியர் தகவல் ஏற்பாடு செய்தல், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயண சுமைப் பெட்டிகள் வாடகைக்கு விடுதல், இணையவழியாக முன்பதிவு செய்யும் இருவழி பயணச்சீட்டுகளுக்கு 10 சதவீத கட்டண சலுகை அறிமுகப்படுத்துதல், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதித்தல், திருச்சி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரத்தில் அதிநவீன தொழிற்நுட்ப வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி மையம் அமைத்தல் ஆகியவற்றை  விரைவில் போக்குவரத்துக் கழகங்களில் நடைமுறைப்படுத்த அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், பயண கட்டணம் தவிர்த்த இதர வருவாயினை பெருக்குவதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளவும், பணிமனைகளில் சோலார் ஒளி பலகைகள் அமைத்து மின்சாரம் தயாரித்தல், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து