எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திரிகோணமலையிலும் மக்கள் திரண்டதால், இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சே தனது குடும்பத்துடன் தீவுக்கு தப்பி ஓடியுள்ளார். மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடக் கூடாது என்பதற்காக கொழும்பு விமான நிலையத்திற்கு செல்லும் வழிநெடுக போராட்டக்காரர்கள் கார்களை நிறுத்தி வைத்து உள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் விலக வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுமக்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தலைநகர் கொழும்பில் அதிபர் அலுவலகம் அருகே காலி முகத்திடலில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கூடாரங்கள் அமைத்து போராட்டங்கள் நடத்தினார்கள்.
போராட்டம் தீவிரமானதை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு வந்து காலிமுகத்திடலில் உள்ள போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இருதரப்பினரும் மோதிக்கொண்டதால் பயங்கர கலவரம் வெடித்தது. அந்த கலவரம் இலங்கையில் தெற்கு பகுதி முழுவதும் பரவியது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் மீது பொதுமக்கள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தினார்கள்.
நாட்டை சீரழித்து விட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தவும், குண்டர்களை தூண்டி விட்டதாக ராஜபக்சே குடும்பத்தினர் மீது போராட்டக்காரர்களுக்கு ஆவேசம் ஏற்பட்டது. அவர்கள் கும்பல் கும்பலாக சென்று ராஜபக்சே சகோதரர்களின் வீடுகள், அவரது ஆதரவாளர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். ராஜபக்சே சகோதரர்களின் பூர்வீக வீடு முற்றிலுமாக தீவைத்து எரிக்கப்பட்டது. அங்கிருந்த ராஜபக்சேவின் தந்தை சிலையும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த கலவரத்தில் 40 தலைவர்களின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களும் எரிக்கப்பட்டன.
கலவரம் அதிகரித்ததால் உயிருக்கு பயந்து கொழும்பு அளரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் ஓட்டம் பிடித்தார். அவரை ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்டதாக கூறப்படுகிறது. சீன ஓட்டலில் தங்கியிருந்த அவர், பிறகு திரிகோணமலைக்கு சென்று அங்குள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்தார். இதற்கிடையே கொழும்பில் கலவரம் ஓயவில்லை. இதையடுத்து வன்முறையை ஒடுக்க முப்படைகளுக்கும் அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
முப்படைகளுக்கும் முழு அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. கலவரம் நீடிக்கும் பட்சத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராணுவ ஆட்சியை கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளன. அதை உறுதிப்படுத்தும் வகையில் முப்படையினரும் நேற்று காலை முதல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கொழும்பு உள்பட முக்கிய வீதிகளில் ராணுவத்தினர் வாகனத்தில் ரோந்து வந்தனர். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது என்று எச்சரித்து சென்றனர். இது மக்கள் மத்தியில் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இலங்கையில் அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவு நேற்று காலை முடிவதாக இருந்தது. அந்த ஊரடங்கு உத்தரவை இன்று (வியாழக்கிழமை) வரை நீட்டித்து அறிவித்து உள்ளனர். என்றாலும் சில இடங்களில் மக்கள் ஊரடங்கை மீறி திரண்டனர்.
திரிகோணமலையில் மகிந்த ராஜபக்சே தங்கியிருக்கும் கடற்படை தளத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு உள்ளனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ? என்று பயப்படுகிறார்கள். இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று காலை இலங்கையில் சில பகுதிகளில் ஊரடங்கையும் மீறி போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன. சில பகுதிகளில் போராட்டக்காரர்களால் வன்முறையும் வெடித்தது.
அங்கொடை என்ற பகுதியில் போலீஸ் வாகனத்தை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரிக்க முயன்றனர். இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் ஒருவர் காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அதிருப்தி அடைந்துள்ள மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் திரிகோணமலை கடற்படை தளத்தில் இருந்து வெளியேறி உள்ளனர். அவர்கள் திரிகோணமலை துறைமுகம் அருகே இருக்கும் சோபர் தீவுக்கு தப்பி சென்று விட்டதாக தெரியவந்துள்ளது. இந்த தகவலை சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நாகாநந்த கொடித்துவத்துக்கு என்ற தலைவர் உறுதிப்படுத்தி உள்ளார். அந்த தீவில் ராஜபக்சே குடும்பத்தினர் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடக் கூடாது என்பதற்காக கொழும்பு விமான நிலையத்திற்கு செல்லும் வழிநெடுக போராட்டக்காரர்கள் கார்களை நிறுத்தி வைத்து உள்ளனர். எனவே விமானம் மூலம் மகிந்த ராஜபக்சே தப்ப முடியாது என்ற நிலை ஏற்பட்டு உளளது. எனவேதான் அவர் திரிகோணமலை கடற்படை தளத்துக்கு வந்ததாக தெரியவந்துள்ளது. திரிகோணமலை அருகே உள்ள சோபர் தீவில் இருந்து அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்
20 Apr 2024புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியே இருக்காது: மகராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
20 Apr 2024மும்பை, தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி சரிந்து விழும்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
இட ஒதுக்கீட்டு கொள்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து
20 Apr 2024புது டெல்லி, நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம்.
-
சனாதனம் பற்றிய உதயநிதி பேச்சு: தெலுங்கானா முதல் கண்டனம்
20 Apr 2024ஐதராபாத், சனாதனம் பற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
அழகர்கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்: அழகர்மலையிலிருந்து மதுரைக்கு இன்று கள்ளழகர் புறப்படுகிறார் : மூன்றுமாவடியில் நாளை எதிர்சேவை
20 Apr 2024மதுரை : மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கிய நிலையில் இன்று (ஏப். 21) மாலை அழகர்மலையிலிருந்து மதுரைக்கு கள்ளழகர் புறப்படுகிறார்.
-
வாக்குச்சாவடியில் விதிமீறல் ? நடிகர் விஜய் மீது புகார்
20 Apr 2024சென்னை, வாக்குச்சாவடியில் விதிமீறல்.? - த.வெ.க. தலைவர் விஜய் மீது புகார்
-
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தால் தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
20 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்தால் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்
-
மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து
20 Apr 2024சென்னை : மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கறந்த பாலில் பறவை காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
20 Apr 2024வாஷிங்டன், பறவைக் காய்ச்சல் அல்லது எச்5என்1 எனப்படும் வைரஸ், கறந்த பாலில் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
-
பாடும் மோனாலிசா ஓவியம்: இணையத்தில் வீடியோ வைரல்
20 Apr 2024வாஷிங்டன், உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் ராப் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ள, குறைந்த தொகுதிகளின் விவரம்
20 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் வாக்கு பதிவு சதவீதம் அதிகரித்த நிலையில், ஒரு சில தொகுதிகளில் கடந்த தேர்தலை விட குறைவா