முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மீது மயங்கி விழுந்த மணமகள் பலி

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      இந்தியா
Srujana 2022 05 13

Source: provided

விசாகப்பட்டினம் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், திருமண வைபவத்தின் போது, தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண், மயங்கி மணமகன் மீது விழுந்து பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மணமேடையில், மணமக்களுக்கு, ஐயர் வேதங்கள் முழங்க, தாலி கட்டும் வைபவம் நடந்து கொண்டிருந்தது. சம்பிரதாயப்படி மணமகன் வெல்லக் கட்டியை எடுத்து மணமகள் தலையில் வைத்த போது திடீரென மணமகள் மயங்கி சரிந்து விழுந்தார்.  உடனடியாக உறவினர்கள் மணமகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மணமகள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று மதுரவாடா பகுதியில் நடந்துள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த மணமகள் ஸ்ருஜானாவின் (22) பெற்றோர், மகள் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறியுள்ளனர். ஆனால், ஸ்ருஜானாவுக்கு திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்தாரா? அதனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்திருக்கும் போலீசார் உடற்கூராய்வு முடிவுகள் வரும் வரை காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் திருமண மண்டபத்தில், விஷச் செடிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து