எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3-வது சுற்று போட்டி ஒன்றில் டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் , ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்
இந்த ஆட்டத்தில் 6-2,6-2,என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆயிரமாவது மாஸ்டர் போட்டி ஒற்றையர் பிரிவில் 16வது முறையாக நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
____________
பேட் கம்மின்ஸ் ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகல்..!
ஐ.பி.எல் 15வது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் கொல்கத்தா அணி இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 5 வெற்றி ,7 தோல்வி என புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் இருந்து வெளியேறவில்லை.
இந்நிலையில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக இந்த தொடரில் இனி வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கபப்டுகிறது.
____________
சென்னை கேப்டன் டோனி குறித்து ஹைடன் கணிப்பு..!
மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பின்னர், ஐ.பி.எல் 2022 இல் பிளேஆஃப்களுக்கான பந்தயத்திலிருந்து சிஎஸ்கே வெளியேற்றப்பட்ட பிறகு சிஎஸ்கே முன்னாள் வீரர் மேத்யூ ஹேடனின் கருத்துக்கள் வெளியாகின.
“விக்கெட்டுகளுக்கு இடையே டோனி எவ்வளவு வேகமாக ஓடுகிறார்! 20 ஓவர் அளவிலான போட்டிக்குள் ஒரு சாதாரண விளையாட்டு வீரரின் வயதைத் தாண்டி ஒரு இளைஞனை போல விளையாடுகிறார். அவர் தொடர்ந்து விளையாட விரும்பினால், அவரால் முடியும், ஏனெனில் அவர் நிச்சயமாக தனது அணிக்காகத் விளையாடுவார். தலைமைக் கண்ணோட்டத்தில் இது மிகவும் முக்கியமானது! டோனி போன்ற ஒருவர் தலைமையில் இருக்கிறார். அது சென்னை அணிக்கே நிலைத் தன்மையை கொண்டு வரும்.”என்று மேத்யூ ஹைடன் கூறினார்.
____________
இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன்: ரிஷி தவன்
நடப்பு ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணியின் ஆல் ரவுண்டராக செயல்பட்டு வருபவர் ரிஷி தவன். இவர் கடைசியாக 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்த நிலையில் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாவதே தனது இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரிஷி தவன் கூறுகையில், " நான்கு வருடங்கள் ஐ.பி.எல்லில் சிறப்பாக விளையாடிய பிறகு இந்திய அணியில் அறிமுகமானேன். பின்னர் நீக்கப்பட்டேன். ஐந்து ஆண்டுகளாக யாரும் என்னை தேர்வு செய்யவில்லை. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் எனது செயல்பாடுகள் கவனிக்கப்படவில்லை. இந்திய அணிக்கு மீண்டும் வருவதே எனது நோக்கம், அதைச் செய்ய நீங்கள் சரியான விதத்தில் சத்தம் போட வேண்டும் என்றார்.
____________
நடிகை நயன்தார படத்தை தயாரிக்கிறாரா டோனி..?
நடிகை நயன்தாராவை வைத்து டோனியின் தயாரிப்பு நிறுவனமான டோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் புதிய படத்தை எடுக்கவிருப்பதாக தகவல்கள் வந்தன. இந்த தயாரிப்புப் பணியில் ரஜினியின் பள்ளியில் பணியாற்றி வந்த சஞ்சய் என்பவர் இணைந்திருக்கிறார் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த தகவல் வெளியான மறுநாளே டோனி எண்டர்டெயின்மெண்ட நிறுவனம் சார்பில் ஒரு மறுப்பு தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த அறிக்கையில், நாங்கள் தற்போது சஞ்சய் என்ற நபருடன் எந்த படத்தயாரிப்புப் பணியிலும் ஈடுபடவில்லை. சஞ்சய் என்ற பெயரில் நாங்கள் யாரையும் பணியமர்த்தவில்லை. அந்த பெயரில் வெளியாகும் போலியான தகவல்களை யாரும் நம்பவேண்டாம். இருப்பினும் சுவாரஸ்மான திரைப்படங்களை எடுப்பதற்கான பணிகளில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். படத்தயாரிப்பு உறுதியானபின், அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். டோனி நிறுவனத்திற்காக விக்னேஷ் சிவன் ஒரு விளம்பரப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
____________
முடிவை மாற்றிய நடுவர்: ட்ரோல் செய்த ரசிகர்கள்
98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை விரட்டிய மும்பை அணி 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இக்கட்டான அந்த சூழலில் பலமான கூட்டணி அமைத்தனர் திலக் வர்மா மற்றும் ஹிருத்திக் ஷோக்கீன். பவர் பிளேயின் கடைசி ஓவரை சிமர்ஜித் சிங் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ஹிருத்திக் ஷோக்கீன், இறங்கி வந்து ஆட முயன்றார். ஆனாலும் அதை மிஸ் செய்திருந்தார் அவர். அதற்கு வொய்ட் சிக்னல் கொடுக்க முயன்றார் நடுவர் சிர்ரா ரவிகாந்த் ரெட்டி. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அப்பீல் செய்தனர். அதையடுத்து தனது முடிவை மாற்றிக் கொண்ட நடுவர், அவுட் என அறிவித்தார்.
இருந்தாலும் DRS ரிவ்யூ எடுத்து தப்பினார் ஹிருத்திக் ஷோக்கீன். தொடர்ந்து ரசிகர்கள் அதனை ட்ரோல் செய்திருந்ததை பார்க்க முடிந்தது. மோசமான அம்பயரிங், நல்ல வேளையாக DRS ரிவ்யூ வேலை செய்தது, நடுவர் அவுட் என அறிவிக்க காரணமே டோனி தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்திருந்தனர். முன்னதாக, இந்த போட்டியில் மின்தடை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டெவான் கான்வே, DRS ரிவ்யூ ஆப்ஷனை எடுக்க முடியாமல் வெளியேறினார். அது சர்ச்சையாக எழுந்திருந்தது.
____________
ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகினார் பிருத்வி ஷா..!
15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் தலா 6 வெற்றி, தோல்விகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனான பிரித்வி ஷா காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மே 1 அன்று கடைசியாக லக்னோவுக்கு எதிராக பிரித்வி ஷா விளையாடினார் அதன்பிறகு அவர் மீண்டும் விளையாடவில்லை. இதுகுறித்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில் பிருத்வி ஷாவுக்கு டைபாயிடோ அல்லது வேறு ஏதோவொரு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லி அணிக்கு எஞ்சியுள்ள இரு லீக் ஆட்டங்களிலும் பிருத்வி ஷா விளையாட வாய்ப்பில்லை என்று அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.