முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 2,858 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

சனிக்கிழமை, 14 மே 2022      இந்தியா
India-Corona 2022 01 12

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் 2,858 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 419, அரியானாவில் 439, மகாராஷ்டிராவில் 263, உத்தரபிரதேசத்தில் 175, கர்நாடகாவில் 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 19 ஆயிரத்து 112 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன் பாதிப்பு 2,827 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 2,841 ஆக உயர்ந்த நிலையில், நேற்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக டெல்லியில் 899 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.கேரளாவில் 419, அரியானாவில் 439, மகாராஷ்டிராவில் 263, உத்தரபிரதேசத்தில் 175, கர்நாடகாவில் 156 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 19 ஆயிரத்து 112 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் மேலும் 11 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 5 மரணங்கள் சேர்க்கப்பட்டதும் அடங்கும். இதுதவிர டெல்லியில் 4 பேர், மகாராஷ்டிராவில் 2 பேர் நேற்று முன்தினம் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,24,201 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 3,355 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 76 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து