முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 25-ம் தேதி 3-வது முறையாக நடக்கும் குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல்

சனிக்கிழமை, 14 மே 2022      தமிழகம்
vote-2022-05-14

Source: provided

தென்காசி : குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல் வருகிற 25-ம் தேதி நடைபெறுகிறது. 

தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இரண்டாவது முறையாக கடந்த மார்ச் 26-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. போதிய உறுப்பினர்கள் வருகை தராததால் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் கடந்த 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் குற்றாலம் பேரூராட்சி தேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலர் விடுத்துள்ள அறிக்கையில், குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி, பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக பேரூராட்சி உறுப்பினர்களின் கூட்டம் வரும் 25.05.2022 அன்று 9.30 முற்பகல் மணிக்கு குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும். தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பேரூராட்சி அனைத்து வார்டு உறுப்பினர்களும் கோரப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து