முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி அனல்மின்நிலயத்தில் 5 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      தமிழகம்
Thoothukudi 2022 05 15

Source: provided

தூத்துக்குடி : தூத்துக்குடி அனல்மின்நிலயத்தில் 5 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன.  தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் தினசரி நிலக்கரி தேவை 9 ஆயிரம் டன் ஆகும். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக மின் உற்பத்தி அவ்வப்போது நிறுத்தப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1, 2, 3, 4, 5 ஆகிய ஐந்து அலகுகளிலும் 1050 மெகாவாட் மின் உற்பத்தி நேற்று நிறுத்தப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து