முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 7-வது முறையாக ஜூன் 15- வரை பரோல் நீட்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      தமிழகம்
Ravichandran 2022 05 15

Source: provided

மதுரை ; முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 7-வது முறையாக இன்று முதல் ஜூன் 15-ம் தேதி வரை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மதுரை மத்திய ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்து வந்தார்.  ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி, தனது மகனுக்கு பரோல் கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ரவிச்சந்திரனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி ஒரு மாத காலம் ஜாமீன் வழங்கப்பட்டது. 

ரவிச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை அடுத்த சூரப்பநாயக்கன்பட்டி கிராமத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சூரப்பநாயக்கன்பட்டி வீட்டில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.

ரவிச்சந்திரனின் விடுப்பு காலம் 2021, டிசம்பர்17 முதல் 2022 ஜனவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு ஜனவரி 16, பிப்ரவரி 14, பிப்ரவரி 15,மார்ச் 16, மார்ச் 17,ஏப்ரல் 15-ம் தேதி என்று 6 முறை விடுப்பு காலம் நீட்டிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ரவிச்சந்திரனின் விடுமுறை காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதற்கிடையே ரவிச்சந்திரனின் தாயார் மகனின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு விடுப்பு காலத்தை நீட்டிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதன் அடிப்படையில் ரவிச்சந்திரனுக்கு இன்

று 16-ம்  தேதி முதல் அடுத்த மாதம் 15-ம்  தேதி வரை 7-வது முறையாக பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து