முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியது தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      தமிழகம்
Weather-Center 2021 06-30

Source: provided

சென்னை : தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி, வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை 17-ம் தேதி,  9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்காசி, விருதுநகர், சேலம் ஈரோட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.  வரும் 18-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, வேலூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 19-ம் தேதி குமரி, நெல்லை, தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 

நாளை 17-ம் தேதி வரை மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ.வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் அப்பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம்.

  தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று தென் மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து