முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்திற்கு பொன்விழா : வாழ்நாளின் வரப்பிரசாதம் என்கிறார் ஓ.பி.எஸ்.

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      தமிழகம்
OPS 2021 07 12

Source: provided

சென்னை : இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசியல் வரலாற்றில் எத்தனையோ அரசியல் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். தடம் பதித்து இருக்கிறார்கள். சாதனை புரிந்திருக்கிறார்கள். வரலாறு படைத்திருக்கிறார்கள். ஆனால், வரலாறாகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா. அவர் வரலாறாக வாழ்ந்த இடமான போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்திற்கு, அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லாம் கோயிலாக பூஜித்த வேதா நிலையத்திற்கு இன்று(நேற்று) பொன் விழா என்பதைபுரிந்து என் மனம் பூரிப்படைகிறது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலின் மையப் புள்ளியாக விளங்கிய இடம் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம்.   இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த வேதா நிலையத்திற்கு பல முறை செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்ததை என் வாழ்நாளில் கிடைத்த வரப் பிரசாதமாக நான் கருதுகிறேன். தமிழ்நாடு முன்னேற்றப்‌ பாதையில்‌ செல்வதற்கான அடித்தளமாக வேதா நிலையம்‌ விளங்கியது என்று சொன்னால்‌ அது மிகையாகாது.

இப்படிப்பட்ட அந்த  கோயிலுக்குச்‌ சென்று அங்குள்ள தெய்வமான ஜெயலலிதாவை காணும்‌ வாய்ப்பை பல முறை பெற்றிருப்பதை எனக்கு கிடைத்த பெரும்‌ பாக்கியமாக நான்‌ கருதுகிறேன்‌. வேதா நிலையத்தின்‌ பொன்‌ விழா நாளான இன்று(நேற்று) நினைத்துப்‌ பார்க்கிறேன்‌. என்‌ கண்கள்‌ கலங்குகின்றன. வார்த்தைகள்‌ வரவில்லை. அந்த கோவிலின்  தெய்வமான ஜெயலலிதாவுக்கு என்னுடைய கோடானு கோடி நன்றிகளையும்‌, வணக்கத்தினையும்‌, மரியாதையினையும்‌  தெரிவித்துக்‌ கொள்கிறேன்.‌ இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து