முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்து இ.பி.எஸ். வழிபாடு

புதன்கிழமை, 18 மே 2022      தமிழகம்
EPS 2022 05 18

Source: provided

சேலம் : அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் காவடி பழனியாண்டவர் கோயிலில் நேற்று தங்கத்தேர் இழுத்து வழிபட்டார்.

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் பிரசித்தி பெற்ற காவடி பழனியாண்டவர் கோயில் உள்ளது.  இங்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித்  தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை  வந்தார்.   

பின்னர், பழனி ஆண்டவர் வள்ளி தெய்வானையை வழிபட்டு கோயில் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்தார். பின்னர் தங்கத்தேர் இழுத்து வழிபட்டார்.  அப்போது மாநகர மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம், முன்னாள் எம்.பி பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து