முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரறிவாளன் விடுதலை: மகிழ்ச்சி தெரிவித்த முருகன்

புதன்கிழமை, 18 மே 2022      தமிழகம்
Murukan 2022 05 18

Source: provided

வேலூர் : பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் முருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் இருந்து அனுமதியின்றி 2020-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு விடியோ அழைப்பு பேசிய வழக்கு தொடர்பாக தொடர்ந்து நேற்று 3-வது நாளாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உள்ள முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரிடம் பேரறிவாளன் விடுதலை குறித்து கேட்டதற்க்கு பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.  தற்போது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 3- ல் முருகனின் மீதான வழக்கில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து