முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பராமரிப்பு பணிக்காக ஆலையை திறக்க அனுமதிகோரி மனு: ஸ்டெர்லைட் நிர்வாக கோரிக்கை நிராகரிப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில்,  அங்கு துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.  இதையடுத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து மே மாதம் 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதை எதிர்த்து  வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு ஆலையை மூட விதித்த தடை தொடரும் என்று கூறி  ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. 

கொரோனா அதிகரித்த காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன்  உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜனை  இலவசமாக வழங்க ஸ்டெர்லைட் நிறுவனம் முன் வந்த நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மூன்று மாதம் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆலை மூடப்பட்டது.  இதை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக ஆலையை உடனே திறக்க அனுமதி கேட்ட ஸ்டெர்லைட்டின்  கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது. ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு பதில் தர உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய மேல்முறையீடு மனுக்கள் மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  மேலும், இது தொடர்பான விசாரணையை ஜூலை மாதம் 2-ம் வாரம் உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரிக்கும் என்று தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து