முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனு: நாடு திரும்பிய 16 மணிநேரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் : கார்த்தி சிதம்பரத்திற்கு சி.பி.ஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      இந்தியா
Karthi 2022-05-18

Source: provided

புதுடெல்லி : விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் நாடு திரும்பிய 16 மணிநேரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரத்திற்கு சி.பி.ஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி தந்ததாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ஆடிட்டர் பாஸ்கர் ராமன் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மற்றும் சீன நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் மும்பை போலீசார், சென்னை, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 10 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 17-ம்தேதி சோதனை நடத்தினர். 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரும் ஆடிட்டருமான பாஸ்கர் ராமனை, சிபிஐ சென்னையில் 17-ம் தேதி நள்ளிரவில் கைது செய்து, நேற்று முன்தினம் சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க 4 நாட்கள் அவகாசம் அளித்து சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டது. 

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் சார்பில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் மீண்டும் நாடு திரும்பும் போது கைது செய்யப்படக்கூடும் என்று அஞ்சி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே, முன்ஜாமீன் கோரி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டு நீதிபதிகள் நேற்று விசாரித்தனர். கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி தந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்புள்ளது என்பதற்கான ஆதாரங்கள் வாக்குமூலத்தை தவிர வேறு எதுவும் இல்லை. எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறினார். 

இந்த நிலையில் சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் இந்த வழக்கு தற்போது ஆரம்பகட்டத்தில் இருப்பதால் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டிய எந்த முகாந்தரமும் இல்லை. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று வாதிட்டார். இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், கோர்ட்டின் அனுமதியுடன் வெளிநாடு சென்றுள்ள கார்த்தி சிதம்பரம் மே 24-ந்தேதி நாடு திரும்புவதாக அவரது வக்கீல் தெரிவித்ததை பதிவு செய்து கொள்கிறோம். 

மேலும் கைது செய்யப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால் இந்த காலம் மிகவும் குறைவு என்றும் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்ற வாதத்தையும் ஏற்கிறோம். ஒருவேளை சிபிஐ அவரை கைது செய்யும் பட்சத்தில் குறைந்தபட்சம் 3 வேலை நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டு, மேலும் கார்த்தி சிதம்பரம் நாடு திரும்பிய 16 மணிநேரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து