தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி இன்று மாலை சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு....
பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10 ஆயிரம் போலீசார் சென்னை மாநகரம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்துக்கு காரில் வரும் வரையிலேயே பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 30 நிமிடங்களுக்கு மேல் காரில் பயணம் செய்து மாலை 5.45 மணி அளவில் மோடி நேரு ஸ்டேடியத்துக்கு வருகை தருகிறார். இதனால் அவர் வரும் பாதை முழுவதும் நேற்று இரவு முதலே போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆய்வு...
மோடி வருகையையொட்டி டெல்லியில் இருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமரின் சாலைமார்க்க பயண வழித்தடங்கள், நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்துள்ளனர். அவர்களுடன் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர். மோடி வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதல்வர் வரவேற்பு...
இன்று மாலை ஐதராபாத்தில் இருந்து பிரதமர் மோடி தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். மாலை 5.10 மணிக்கு அவர் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கிறார்கள்.
பிரதமருக்கு வரவேற்பு...
இதன் பின்னர் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையாறு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் அவர் நேரு ஸ்டேடியத்துக்கு செல்கிறார். பிரதமர் மோடி காரில் செல்லும் போது வழி நெடுகிலும் அவரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து நேரு ஸ்டேடியம் வரை வழிநெடுகிலும் பா.ஜனதா தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுக்கிறார்கள்.
50 ஆயிரத்துக்கும்...
பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிப்பதற்காக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்து பா.ஜனதா நிர்வாகிகள் சென்னைக்கு திரண்டு வருகிறார்கள். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டு வந்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள்.
பல்வேறு அணிகள்...
சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து நேரு ஸ்டேடியம் வரை 25 இடங்களில் வித்தியாசமான முறையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக பா.ஜனதாவை சேர்ந்த பல்வேறு அணியினரும் களத்தில் இறங்குகிறார்கள். விவசாய அணியினர், மகளிர் அணியினர், வக்கீல் அணியினர், நெசவாளர் அணியினர், இளைஞர் அணியினர் 25 விதமான வரவேற்புகளை அளிக்க தயாராகி வருகிறார்கள். விவசாயிகள் நெற்கதிர்களை பிடித்தபடி நின்று வரவேற்பு கொடுக்கிறார்கள். மேலும் திருவள்ளுவர் சிலை ஒன்றை கொண்டு வந்து நிறுத்தியும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு அளிப்பது தொடர்பான பணிகளில் பா.ஜனதா கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
400 வி.ஐ.பி.க்கள்...
இதற்கிடையில் நிகழ்ச்சி நடைபெறும் நேரு ஸ்டேடியத்திலும் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அங்கு ஆயிரக்கணக்கானோர் அமருவதற்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தி.மு.க. சார்பில் 2 ஆயிரம் பேர் விழாவில் பங்கேற்க பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் பா.ஜனதா சார்பில் 2 ஆயிரம் பேர் பங்கேற்கவும் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் என 400 வி.ஐ.பி.க்களும் பங்கேற்கிறார்கள்.
டெல்லி திரும்புகிறார்...
நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக 10 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, டாக்டர் சி.சரஸ்வதி உள்பட 10 பேர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்கள். பிரதமர் மோடி அவர்களுடன் 10 நிமிடம் பேசுகிறார். பின்னர் அவர்களுடன் மோடி குழு புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார். விழா முடிந்ததும் பிரதமர் மோடி மீண்டும் காரில் புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையாறு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பழைய விமான நிலையம் செல்கிறார். பின்னர் இந்திய விமானப் படை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
-
ஆப்ரிக்க ராட்சத நத்தையால் நடுங்கும் அமெரிக்க நகரம் : மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை
05 Jul 2022புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
புதிய உத்வேகத்துடன் தமிழக உயர்கல்வித்துறை: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Jul 2022கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
-
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்
05 Jul 2022லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
-
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கோஷம்: அவையை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே
05 Jul 2022கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
-
அனைவருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் : டெல்லி மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
இதுவரை 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்: அக்னி வீரர்களில் பெண்கள் மட்டும் 20 சதவீதம் பேர் இருப்பர்: கடற்படை
05 Jul 2022புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
-
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது : சானியா - மேட் பேவிக் ஜோடி
05 Jul 2022லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
-
இங்கி.க்கு எதிராக தாமதமான பந்துவீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்
05 Jul 2022பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
-
வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்
05 Jul 2022பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
-
கடைசி டெஸ்டில் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய ரசிகர்கள் விசாரிக்க இங்கி. கிரிக்கெட் வாரியம் உத்தரவு
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
-
12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு ஓ.பி.எஸ். கடிதம்
05 Jul 2022சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
-
இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
05 Jul 2022மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
-
டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்
05 Jul 2022இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வருகிறது வார்டு கமிட்டி, ஏரியா சபை : வழிமுறைகள் வெளியீடு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் : சிவ, சிவா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
05 Jul 2022கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
-
புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அனுமதி
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
சென்னையில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : இயக்குனர் வீரராகவ ராவ் தகவல்
05 Jul 2022சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
-
கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : ஜெயக்குமார் பேட்டி
05 Jul 2022சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 98 சதவீத ரேசன் பொருட்கள் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் : உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
-
அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி
05 Jul 2022வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
நீதி போதனை வகுப்புகள் அறிமுகம்: தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி 13 பேர் மாயம்: தேடும் பணி தீவிரம்
05 Jul 2022ரோம் : இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
வெள்ளப் பெருக்கு: குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை : ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்
05 Jul 2022தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அரு
-
போரினால் சிதைந்த உக்ரைனை மறுசீரமைக்க 750 பில்லியன் டாலர்கள் தேவை: ஜெலென்ஸ்கி
05 Jul 2022கீவ் : போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான தீர்மானங்கள் வெளியானது
05 Jul 2022சென்னை : 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.