முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உயரும் கொரோனா பாதிப்பு..! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

வியாழக்கிழமை, 9 ஜூன் 2022      தமிழகம்
Radhakrishnan 2021 07 03

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மிக முக்கியமான 5 மாவட்டங்களில்  கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது மருத்துவத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் இந்த தகவலை தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தில் வரும் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியருப்பது கவலைதரும் தகவலாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து