முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 7,240 ஆக அதிகரிப்பு

வியாழக்கிழமை, 9 ஜூன் 2022      இந்தியா
corona-2022-06-02

இந்தியாவில் அன்றாட கொரோனா பாதிப்பு 7,240 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 40 சதவீதம் அதிகம்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா தொற்று நிலவரம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்திற்குப் பின்னர் நேற்றைய பாதிப்பு முதன்முறையாக அதிகரித்துள்ளது.

அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 1.31 சதவீதமாகவும், வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 2.13 சதவீதமாகவும் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 8 பேர் இறந்தனர். இதனால் மொத்த இறப்பு 5,24,723 ஆக உள்ளது. கொரோனா தொற்று ஆரம்பித்ததில் இருந்து இந்தியாவில் 4.31 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2701 பேருக்கு தொற்று உறுதியானது. இது கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகம். அதேபோல் டெல்லியில் 564 பேருக்கு தொற்று உறுதியானது. மே 15க்குப் பின்னர் டெல்லியில் 500க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 195 கோடிக்கும் அதிகமான டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து