எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச்செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக ரூ. 43.68 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில்களில் திருமண மண்டபம், திருக்குள பணிகள், வைணவ பிரபந்த பாடசாலை, பக்தர்கள் தங்கும் மண்டபம், கம்பிவட ஊர்தி கீழ் நிலையம், திருக்கோயில் பள்ளிகள் கூடுதல் கட்டிடம், வணிக வளாகம் போன்ற புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 9.67 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில்களில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம், வணிக வளாகம், முடிகாணிக்கை மண்டபம், பக்தர்கள் ஓய்வுக்கூடம், திருக்குளம் புதுப்பித்தல், திருமண மண்டபம், வாகனப் பாதுகாப்பு மண்டபத்துடன் கூடிய அலுவலகக் கட்டிடம் போன்ற முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக திருக்கோயில்களின் வளர்ச்சிக்கான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டம், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்பு, 100-க்கும் மேற்ப்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பழுது பார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், திருக்கோயில்களில் திருப்பணிகள் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளையும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் என்று பக்தர்களிடம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.
அந்த வகையில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்ததேஸ்வரர் திருக்கோயிலில், ரூ.14.76 கோடி மதிப்பீட்டில் வீரவசந்தராயர் மண்டபம், திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்டும் பணிகள், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், ஆன்மிகச் செம்மல் ஆளவந்தார் அறக்கட்டளையில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வைணவ பிரபந்த பாடசாலை கட்டும் பணி, சென்னை, கொசப்பேட்டை, அருள்மிகு கந்தசாமி மற்றும் ஆதி மொட்டையம்மன் திருக்கோயிலில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி,
சென்னை, மாதவரம், அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் புது திருக்குளம் அமைக்கும் பணி, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ரூ. 2.56 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய முடிகாணிக்கை மண்டபம், விருந்தினர் அறை, சேவார்த்திகள் ஓய்வுக்கூடம், இரண்டு திருக்குளங்கள் புனரமைக்கும் பணிகள், சிவகங்கை மாவட்டம், மடப்புரம், அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம், பக்தர்கள் தங்கும் மண்டபம் மற்றும் வாகனம் நிறுத்துமிடம் கட்டும் பணிகள்,
விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் விருந்து மண்டபம் கட்டும் பணி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அருள்மிகு கொப்புடை நாயகியம்மன் திருக்கோயிலில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் புதிய வாரச்சந்தை அமைக்கும் பணி, திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம், அருள்மிகு வாழை தோட்டத்து அய்யன் திருக்கோயில் மேல்நிலைப் பள்ளியில் ரூ.96.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம்,
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி, கரூர் மாவட்டம், குளித்தலை, அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் ரூ. 78.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கம்பி வட ஊர்தி கீழ் நிலையம், கட்டணச் சீட்டு விற்பனை அறை, வரிசையில் நிற்பதற்கு மண்டபம் கட்டும் பணிகள்,
மதுரை மாவட்டம், அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் ரூ. 62 லட்சம் மதிப்பீட்டில் கோட்டைச்சுவர் கட்டும் பணி, ரூ. 38.50 இலட்சம் மதிப்பீட்டில் ஆடி வீதியில் கல்தளம் அமைக்கும் பணி, ரூ.9.10 கோடி மதிப்பீட்டில் நுழைவுவாயிலில் இருந்து அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோயில், அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் வரை மலைப்பாதை, 4.2 கி.மீ அளவுக்கு தார்சாலை மற்றும் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள்,
திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரூ. 63 லட்சம் மதிப்பீட்டில் மலைக்கோயிலுக்கு செல்லும் யானைப்பாதையில் கழிப்பறைகள் கட்டும் பணி, கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை, அருள்மிகு மகா தேவர் திருக்கோயில் பள்ளிக் கட்டிடங்களை ரூ. 32 லட்சம் மதிப்பீட்டில் பழுதுபார்க்கும் பணி,
அழகர்மலை, அருள்மிகு முருகன் திருக்கோயிலில் ரூ. 49 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை மற்றும் வளாகம் கட்டும் பணிகள், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில், ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் மின் இணைப்பு வசதி என மொத்தம் 43 கோடியே 68 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான திருக்கோயில் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர், அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் ரூ. 2.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம், பக்தர்கள் ஓய்வுக்கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி, கடலூர் மாவட்டம், சிதம்பரம், அருள்மிகு இளமையாக்கினார் திருக்கோயிலில் ரூ. 2.62 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட திருக்குளம், மதுரை மாவட்டம், சோழவந்தான், அருள்மிகு பதினெட்டாம்படி கருப்பணசுவாமி திருக்கோயிலில் ரூ. 15 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம்,
மயிலாடுதுறை மாவட்டம், கும்பகோணம், இன்னம்பூர், அருள்மிகு எழுத்தரிநாதர் திருக்கோயிலில் ரூ. 63 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ரூ. 61 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறை மற்றும் குளியல் அறைகள், ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ. 57 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதான மண்டபம்,
திருவண்ணாமலை மாவட்டம், ஆவணியாபுரம், அருள்மிகு இலட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ. 49 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் ஓய்வுக்கூடம், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான், அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 48 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ரூ. 48 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள்,
தேனி மாவட்டம், வீரபாண்டி, அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், கரூர், அருள்மிகு அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ரூ. 30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், அருள்மிகு பச்சையம்மன் மன்னார் சுவாமி திருக்கோயிலில் ரூ. 28 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயிலில் ரூ. 26 லட்சம் செலவில் தரைத்தளத்தில் வாகன பாதுகாப்பு மண்டபம் மற்றும் முதல் தளத்தில் அலுவலகக் கட்டிடம் என மொத்தம் 9 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற திருக்கோயில் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மதுரை மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி, பூமிநாதன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை மாவட்ட கலெக்டர் மரு. எஸ். அனீஷ் சேகர், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.