முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 80 மையங்களில் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2022      தமிழகம்
Student 2022-06-06

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் 80 மையங்களில் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக அரசின் பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இதில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 1-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று தொடங்கியது. 

தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது. தினமும் குறைந்தபட்சம் 24 விடைத்தாள்கள் வீதம் திருத்தி முடிக்க வேண்டும் என்றும், விடைத்தாள் திருத்துதல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த பணிகளை முடித்து ஜூலை 7-ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து