முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அலையா? - சுகாதாரத்துறை செயலர் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2022      தமிழகம்
Radhakrishnan 2021 07 03

Source: provided

சென்னை : தமிழகத்தில் மீண்டும் கொரோனா அலையா என்பது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. 100 க்கு கீழ் இருந்த தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது ; தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை உறுமாறிய கொரோனா தொற்று பதிவாக தொடங்கியுள்ளது.

இது கொரோனா அலை கிடையாது. சிறிய ஏற்றம் தான். நாம் அலர்ட்டாக இருக்க வேண்டும். வரும் 12ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அனைத்து இடங்களுக்கும் தேவையான தடுப்பூசி அனுப்பியுள்ளோம். இதுவரை 11.18 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து