முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை நகரில் புதிய மேம்பாலங்கள் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      தமிழகம்
CM-2 2022 06 11

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச்செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் நகரில் ரூ.230 கோடி செலவில் இராமநாதபுரம் மற்றும் சுங்கம் முக்கிய சந்திப்புகளில் தே.நெ.எண். 67-ல் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் அதே தேசிய நெடுஞ்சாலையில் ரூ. 60 கோடி செலவில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை திறந்து வைத்தார். 

பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில்,  வணிகம், சுற்றுலா, போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை பராமரிப்பதும், மேம்பாடு செய்வதும் மற்றும் கிராமப் புறங்களுக்கு இணைப்புச் சாலை அமைப்பதும் நெடுஞ்சாலைத் துறையின் முக்கிய பணிகளாகும். தமிழக அரசு   நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.

அந்த வகையில், இராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்பில் ரூ. 230 கோடி செலவில் 3.15 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள 4 வழித்தட மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். 

இப்பாலம் திறக்கப்படுவதால், இராமநாதபுரம், ஒலம்பஸ் மற்றும் சுங்கம் ஆகிய மூன்று முக்கிய சந்திப்புகள் மற்றும் அல்வேனியா பள்ளி சந்திப்பு, சவுரிபாளையம் சந்திப்பு, புளியகுளம் பிரிவு சாலை சந்திப்பு, வானொலி நிலையம் சந்திப்பு, பந்தய சாலை சந்திப்பு, வாலாங்குளம் சாலை சந்திப்பு ஆகிய 6 இதர சந்திப்புகளிடையே உள்ள போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, சிக்னல் மற்றும் சந்திப்புகளில் வாகனங்கள் நின்று செல்வதால் ஏற்படும் காலதாமதமும் தவிர்க்கப்படும். அத்துடன் விபத்துக்களை தவிர்ப்பதற்கும் இது உதவும். மேலும், சிங்காநல்லூரிலிருந்து அரசு மருத்துவமனை, இரயில் நிலையம், நகர்மண்டபம், உக்கடம் ஆகிய பகுதிகளுக்கு மக்களால் போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக  செல்ல முடியும். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவர். 

மேலும், கோயம்புத்தூர் நகரில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ரூ. 60 கோடி செலவில் 1.17 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள 4 வழித்தட மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் நேற்று திறந்து வைத்தார். இப்பாலம் திறக்கப்படுவதால், கவுண்டம்பாளையம் மற்றும் நல்லாம்பாளையம் சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். இதன்மூலம் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி, கூடலூர் மற்றும் மைசூர் செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்  எ.வ.வேலு, தலைமைச்செயலாளர் இறையன்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச்செயலாளர் தீரஜ் குமார், தலைமைப் பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலை) பாலமுருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து